தேவகி, ஒரு சமுக செயல்பாட்டாளர்; எழுத்தாளர்; ஒவியர் என்று பல முகத்தன்மை கொண்டவர்.
அவருக்கு இப்போது வயது 80 ஆகிறது. இன்றும் அவரை சந்தித்து நேர்காணல் காண "காட்சி ஊடகங்கள் காத்து இருக்கின்றன.
அவருடைய பேச்சு இப்போது அதிகம் பகிரப் பட்டு வருகிறது.
ஒரு நிருபர் அவரிடம் பேட்டி காணும் போது :
"மேடம், நீங்கள் சமூக அக்கறை கொண்டவர்; பெண்கள் விஷயத்தில் குரள் கொடுக்கத் தவறியது இல்லை. அது அவர்களுடைய 'உடையைப்
பற்றியோ, மதரீதியான தடைகள் பற்றியோ - 'அடிப்படை நீதி'-எல்லா மனித குலத்திற்கும் பொருந்தும் என்றும் பேசிவந்து உள்ளீர்கள்".
என்னுடைய நேரடியான கேள்வி?
"பூனை நடை" என்கிற பெயரில் நடிகைகளும், அவர்களைப் பின் தொடர்ந்து பெண்கள் ( பள்ளி, கல்லூரி உட்பட) தங்களை கேளிப்பொருளாக காட்டிக் கொண்டு , முக நூலிலும், இன்ஸ்டாகிராமிலும் பகிர்ந்து வருவதை எப்படி பார்க்கிறீர்கள் ?
ஒரே வார்தை; அதுவே வாக்கியம். இது ஒரு மாயை. Like பெருவதற்காக செய்யப்படும் ஒரு "விளையாட்டு வலை," . சிறிது காலம் களித்து புளித்து விடும். மனிதனுக்கு மறதியே வரம்.
இது தனி மனித உரிமை; மேலும் இந்த செயல் பிறர் மனதை , மதத்தை, இனத்தை புண்படாத விதத்தில் இருக்கும் பட்சத்தில் இதை ஒரு 'பொழுது போக்காக' எடுத்துக் கொண்டு கடந்து செல்வதே மேல்!
ஆண் தன்னை ஆளுமையாக காட்டுக் கொள்ள பல வழிகளை நாடுகிறான். இதுவும் ஒருவகையில் பெண்கள் தங்கள் "ஆளுமையை " இந்த வழியில் வெளிக் கொணர்கிறார்கள் என்று எடுத்துக் கொள்ள வேண்டயது தான்.
இதில் பெண்மை, கற்பு என்று தொடர்பு படுத்தி பேசுவது அபத்தம். இது ஒரு மனப்போராட்டத்தின் வெளிப்பாடு; இதை ஏற்றுக் கொள்வதும்; நிராகரிப்பதும் அந்த அந்த சமூகத்தின் சிந்தனைக்கு விட்டு விடுகிறேன்.
இதுவே உலவியில் ரீதியான பதிலாகவும் இருக்கும்.
வேறு ஏதாவது 'விடயம்' இருந்தால் , இந்த காணொளியைப் பார்பவர்கள், 'கமெண்ட்' செய்ய கேட்டுக் கொள்கிறேன். சமூகமாக இருந்து சுமூகமாக என்ன செய்ய முடியும் என்பதைப் பார்ப்போம்.
மேலும் கோட்பாடுகளும் , சிந்தனைகளும் நாட்டுக்கு நாடு, இனத்துக்கு இனம் , அரசியலுக்கு அரசியல் வேறுபடும்.
அமெரிக்காவில் "பொருளதாரக் குற்றம்" பெரிய குற்றம். மேலும் ஒருவருடைய விருப்பத்தில் அல்லது சுகந்திரத்தில் தலையிட அரசுக்கும் உரிமை இல்லை.
ஆனால் , நம் நாட்டில் "தலை கீழ் ".
பொருளாதாரக் குற்றம் மன்னிக்கப்படுகிறது . தனிநபரின் அந்தரங்கம் பேசு பொருளாக மாறுகிறது.
வாழ்வியலும் , ஒழுக்கமும் பொருளாதாரத்தில் இருந்து மீட்கப் படவேண்டும்.
தெளிவு வரும் ; தெளிவோம் !!!.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக