"படிக்கும்போதே ஒரு குறிக்கோளுடன்படிக்க வேண்டும்.
நம்முடைய இலக்கு என்ன?
எதற்காக படிக்கிறோம்?
இந்த சமுதாயத்தில் நம் பங்கு என்ன?-
என்பதைப் பற்றிய 'புரிதல் ' நம்முடைய குழந்தைகளுக்கு அறவே இல்லை என்றே சொல்ல வேண்டும்."
மகன் +2 வகுப்பிலும் , மகள் 10th வகுப்பிலும் படித்துக்கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு இன்னும் 60 வருட வாழ்க்கையை (அமைத்துக் கொடுப்பது) பற்றி அலுத்துக் கொண்டே 'என்ன நான் சொல்வது சரிதானே ? என்ற படி காலை பத்திரிகை செய்திகளை படித்துக் கொண்டே வந்த காப்பியை சிறிது தொண்டையில் மூழ்கிய படியே வினவினார் !
எல்லாம் சரி, ஆனா ஒன்றும் எனக்கு சரியாக படலே ;
என்னடி ;? ஆமா போங்க, நாளு நாளா நம்ப சமைய பாத்திரம் சுத்தம் செய்றவங்க வரவே இல்லை ;
நானும் போன் பண்ணி பார்த்தேன். எடுக்க மாட்டேங்கிறாங்க,
நம்ப பையனை ஸ்கூல் போகும் போது பார்த்து விட்டு போகச் சொன்னேன்.
எங்க கேட்கிறாங்க? - உங்க மகளைப் பற்றி பேசவே வேண்டாம் .அப்படி வளர்கிறேள்.
"என்ன பரத நாட்டியம், கலை , ஒவியம் என்று கற்று பயன்"
பெற்ற தாய்க்கு ஒரு கஷ்டம் என்று வந்தால் பதற வேண்டாமோ?
'நீ சொல்றது நன்னா எனக்கு புரியுது; என்னை என்னச் செய்ய சொல்ற '
ஒண்ணும் செய்ய வேண்டாம். என் குறைய மட்டும் சொன்னேன்.அவ்வளவுதான்.
முடிந்தால் வேறு ஏற்பாடு செய்யவும்; இல்லையேல் எல்லோரும் சேர்ந்து "Swiggy" ஆர்டர் பண்ணி சாப்பிடுங்க.
-"எனக்கு மட்டும் தான் என்னால் சமைக்க முடியும்" - அந்த நொடியில் அவள் வாழ்ந்தாள்.
அடிப்பாவி ; இப்படி சுயநலக்காரியாகி விட்டியே !!! இது அடுக்குமா ????
எழுந்து தன் அண்ணாரைப் பார்த்தாள். பார்த்த பார்வை அப்படியே இருந்தது.
அவர் மீது சாய்ந்தாள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக