வியாழன், 3 ஆகஸ்ட், 2023

கவிஞர்களே !! உங்கள் கவனத்திற்கு !!!

வணக்கம். ஐந்திணை ஐந்நூறு நூலிற்கு, 

       குறிஞ்சி திணையில் எழுதுபவர்கள் பாலை திணையிலும்  
       முல்லை திணையில் எழுதுபவர்கள் நெய்தல் திணையிலும்  
  மருதம் திணையில் எழுதுபவர்கள் நெய்தல் திணையிலும்  
       நெய்தல் திணையில் எழுதுபவர்கள் முல்லை திணையிலும்  
       பாலை திணையில் எழுதுபவர்கள் முல்லை திணையிலும் 


2 பாடல்கள் இயற்றி அனுப்பி வைக்க இறுதி நாள் 31-08-2023. தமிழில் எழுதினால் அவமானமில்லை வருமானம் என்பதை உலகிற்கு எடுத்துரைக்கும் வகையில் இந்த நூலில் ஆசிரியராகப் பங்கெடுக்கும் பாவலர்கள் அனைவரையும் புத்தகக் காட்சி மேடையில் விலைமதிப்புள்ள ஒன்றோடு நாம் சிறப்பிக்கும் வண்ணம் சில முயற்சிகளை முன்னெடுத்து வருகிறோம். நிச்சயம் வெற்றி பெறுவோம். ஆகவே 2 பாடலா.. மரபா.. என மனம் தளராமல் தாங்கள் முழு மனதோடு பங்கேற்று வெற்றி பயணத்தில் உடன் வர ஒவ்வொருவரையும் தமிழன்போடு அழைக்கிறோம். இணையாதவர்கள் இணைய விரும்பினால் இணைந்து கொள்ளலாம். இந்த நூலில் இணையாமல், குழுவில் இருப்பவர்கள் குழுவிலிருந்து விலகாமல் குழுவில் தொடர்ந்து பயணிக்கலாம். நாம் முன்னெடுக்கும் அடுத்தடுத்த முயற்சிகளில் உங்களுக்கு விருப்பமான நிகழ்வுகளில் பங்கெடுக்கலாம். நன்றி. 


மரபில் பாடல் இயற்ற தெரிந்தவர்களுக்கு மட்டும் இந்த அறிவிப்பு

கவிஞர்கள் பயிற்சி எடுத்து ஆசிரியப்பாவில் பாடல் இயற்ற இருப்பதால், மரபில் பாடல் இயற்ற தெரிந்தவர்கள் வேறு பா வகைகளில் பாடல் இயற்றி ஐந்திணை ஐந்நூறு நூலினை அலங்கரிக்குமாறும், பாடல், திணை சார்ந்த ஒரு கதைக் களத்தினை கொண்டிருக்க வேண்டும் என்பதையும் நினைவில் கொண்டு படைக்குமாறும் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். உதாரண கதைக் கள பாடல் ஒன்று கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 


Tamil speech..tamil Azagu
https://youtu.be/u1SOVIH00b4


பாடல் 20 வரிகளுக்குள்ளும், பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தோடு தங்களைப் பற்றிய சிறு குறிப்பு 5 வரிகளுக்குள்ளும் இருக்குமாறு தட்டச்சு செய்து 9445473609 என்ற புலனத்திற்கு அனுப்பி வைக்கும் படி தமிழன்போடு கேட்டுக் கொள்கிறோம். நன்றி.


கல்லை கூட்டி குவித்து வைத்திருக்கும்என்னை நீவிரும் அறியலையோ...குன்று குன்றாய் இருக்கும் என்னைகுற்றப் படுத்தி கவி வடித்தாலும் குறிஞ்சி நான் குன்றா புகழ் புவியில் உமக்குத் தந்திடுவேன்நெட்டை குட்டை பச்சை சிறகாகிகொட்டும் வெயிலில் குடையாகதொட்டு பேசும் தென்றலுக்கும் தெவிட்டா இன்பம் கொட்டிடும் என்னை கூட்டி குறுக்கி கவி வடித்தாலும்-புகழ் கொட்டி கொட்டி முல்லை நான் தந்திடுவேன் ஓடும் ஆறும் கூட தேடும்பாடும் பச்சை புற்களின் கீதம்சாடும் நீளம் சகதி சங்கதிகள் பேசும்மாடும் ஆடும் வாழுமிடம் அறியலையோ.....பாட்டாய் கவிதை வடிக்கலையோ.....எப்பாடுபட்டு உழைத்தாலும்எம்பாட்டுக்கு பலன் உமக்கு மருதம் நான் தந்திடுவேன் அலையும் மணலும் கை தட்டும்ஆலை இருப்பது அறியலையோஆரவாரம் அடங்காமல்அலையாய் குதிப்பது காணலயோசிலையாய் எண்ணி கவிதை வடித்தாலும்குலையா புகழ் நெய்தல் நான் தந்திடுவேன் வளங்கள் கெட்டு போன என்னை- நல் மனங்கள் கொண்ட நீவிரும்...மதிமறந்து போனீரோ....மண்ணாய் கிடக்கும் என்னைமன்னித்தேனும் கவி வடித்தாலும்வளங்கள் கிடைக்க உம் கவியும் வரமென்றேவாழ் நாளெல்லாம் பாலை நான் மகிழ்ந்திடுவேன் புதுக் கவியினில் கரமேனும் நீட்டுங்கள் நூலினில் எங்களுக்கும் இடம் தாருங்கள்இயற்கை திணைகள் என்பக்கம் இணைந்திருந்துஐந்திணை ஐந்நூறின் பக்கம் நிரப்பிடுங்கள்உங்கள் பக்கம் நாம் நின்று உள்ள மகிழ்வு தந்திடுவோம்இனியும் கேட்டு சொல்லை சிதைத்தல் ஆகாதுஇதயம் கொண்டு நெல்லை கொறித்தல் ஆகாதுஉதயம் எட்டு வரும் முன்னேஉம் கவிதை எட்டும்படி செய்திடுவீர்உயர் புகழும்...உம்மொழிக்கு உய்திடுவீர்


http://www.avalokitam.com/analyzer

 என்ற இணையதளம் புதுக்கவிதையை பா வகையில் மாற்றிட உதவி செய்கிறது. இதுவரை ஐந்திணை ஐந்நூறு நூலிற்கு பாடல்களை அனுப்பாதவர்கள் பயன்படுத்திக் கொள்க.