திங்கள், 8 டிசம்பர், 2025

திருக்குர்ஆனின் ஒளியில் அறிவியல் ஆச்சரியங்கள்!!


திருக்குர்ஆனின் ஒளியில் அறிவியல் ஆச்சரியங்கள்!! https://keelainews.in/kavignar-kapuli-shait/08/12/2025/

https://keelainews.in/thirukkuran-oliyil-viggananm/09/12/2025/

https://keelainews.in/thirukkuran-oliyil-viggananm-3/10/12/2025/

வியாழன், 4 டிசம்பர், 2025

கட்டுரை _ இடத்தில் இருந்து இப்புக்கு

இடத்திலிருந்து இருப்புக்கு

விவேக்
Interior with Young Woman Seen from the Back – Vilhelm Hammershøi.

உடலிலிருந்து இருப்புக்கு


“இடங்களின் ஒழுங்கமைவுகளை
நாம் கட்டுவதில்லை
அவை இடங்களாக இருப்பதாலேயே
ஒழுங்கமைவுகளாகவும் இருக்கின்றன”

மனுஷ்யபுத்திரன்

OOO

சென்றவாரம் எங்கள் நிறுவனத்தின் முதன்மை நிர்வாகி 3 நாள் பயணமாக முதல்முறையாக பெங்களூரு வந்திருந்தார். அவர் லண்டனில் வசிக்கும் 50 வயது நிரம்பிய ஒரு ஜமைக்கப் பெண். வேலைப்பளுவினால் அலுவலகத்திற்குள் சிறு தொய்வுற்று காணப்பட்டாலும், அலுவலகத்திற்கு வெளியில் நகரத்தை சுற்றி பார்க்கும் போது மிகவும் உற்சாகத்துடன் காணப்பட்டார். அதைப்பற்றி வினவியபோது அவர், முன்பு சென்ற மற்ற நகரங்களில் தான் ஒரு மற்றமையாக (other) உணரப்பட்டதாகவும், பெங்களுருவில் தன்னிலையை (self/subjectivity) உணர்வதாக கூறினார்.ஜமைக்காவை சேர்ந்த ஒரு பெண் இந்தியாவில் இந்த உணர்வை அடைந்ததற்கான காரணம் என்னவாக இருக்க முடியும்? இன்றைய நவீன மனிதன் பல்வேறு இடங்களில், வெல்வேறு கலாச்சார அம்சம் கொண்ட சமூகங்களில் வாழும் சாத்தியம் உருவாகி வந்துள்ளது, அவ்வாறிருக்கையில் ஒரு மனிதன் தன்னை தானாக(self) உணர்வதற்கான காரணிகள் என்ன?

மனிதனின் இருப்பை விசாரணை செய்த அறிவியல் கொள்கைகள் மனிதனையும் பிரபஞ்சத்தில் உள்ள மற்ற பருப்பொருட்களை போல கால வெளியில் கொண்டுள்ள இடம், எடை, திணிவு போன்ற அளவீட்டை கொண்டு புறவயமாக அறிந்துகொள்ள முடியும் என்று எண்ணி ஆராய்ந்து வந்தன.

பருப்பொருட்களின் பௌதீக கூறுகள் நிலைக்கொண்டால் அவை சமநிலையில் உள்ளன. ஆனால், உடலின் பெளதிக கூறுகள் நிலைக்கொண்டாலும் மனிதன் சமநிலைக் கொள்வதில்லை. தன்னிலையை(self) அறிய முடியாது விலக்கமும், பதற்றமும்  கொள்வதை அறிவியல் கொள்கைகளை கொண்டு விளக்க முடியவில்லை. அதுவரையில் நம்பப்பட்டு வந்த அறிவியல் கொள்கையின் படி, தூல உடல் என்பது பௌதிகமானது. மனிதனை வெறும் தூல உடலாக அணுகிய அறிவியல் கொள்கைகள், தத்துவங்கள் எல்லாம் முடிவில் பொருள்முதல்வாத (materialistic) சிந்தனையை முன்வைப்பவையாகவே இருந்தன. பொருள்முதல்வாதம் மனித இருப்பின் தன்னிலையை கணக்கில் கொள்ளாமல் அதை ரத்து செய்துவிட்டது. அதற்கு பின் வந்த புலனறிவுவாத(empiristic) கொள்கைகளோ பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தையும் தூல உடல் கொண்டுள்ள புலன்களின் கூறுகளுக்குள் சுருக்கி விடுகிறது, அதிலும் மனிதனின் தன்னிலையை ஆராய வழியில்லை. இன்னொரு புறம், கருத்துமுதல்வாதமோ இந்த புவியில் நடக்கும் எந்த விஷயத்தையும் உண்மையாக நம்பத் தலைப்படவில்லை.

இந்த புள்ளியில் இருந்தே மனித இருப்பு பௌதிகமான தூல உடலால் (inert body) மட்டும் ஆனதல்ல, வேறு அம்சம் உள்ளது என்ற சிந்தனை முளைத்தெழுகிறது. அந்த அம்சம் தூயக் கருத்தாகவும் எண்ணப்படவில்லை. உடலுக்கும்-இருப்புக்கும்-தன்னிலைக்கும் உள்ள தொடர்பை விசாரனை செய்த இருபதாம் நூற்றாண்டின் முக்கிய சிந்தனையான தோற்றவியலை(phenomenology) விரிவு செய்த தத்துவ அறிஞரான பொன்டி (Maurice Merleau-Ponty) மனிதனின் தன்னிலையை தூல உடலை மட்டும் வைத்து புரிந்துகொள்ள முடியாது, அதை அவன் வாழும் உடல் (living body) கொண்டே அறிய முடியும் என்கிறார்.

தூல உடலை போல் அன்றி, வாழும் உடல் என்பது, தான் அமைந்துள்ள சூழலில் இருந்து செறிவான அனுபவங்களை உருவாக்கிக்கொள்ளும் சாத்தியங்களை கொண்டது. புறவய யதார்த்தங்களில் இருந்து, இருப்பின் இயல்பை அறியக்கூடியது. தூல உடலுக்கு அளிக்கப்படும் இடம் (place) எனும் பௌதிக அணுகுமுறை புறவெளியை(outer space) முதன்மைப்படுத்தி, அதிலிருந்து அவ்வுடல் எனும் பருப்பொருள்(object) கொண்டிருக்கும் இடம் நோக்கி கணக்கிடுவது. புறவயமானது, ஓர்முக சிந்தனை கொண்டது, பொருள் கொண்டுள்ள நிலை அடிப்படையில் (objective,homogeneous & positional) சிந்திப்பது. நாற்காலி அறையின் சுவரில் இருந்து இரண்டடி தூரத்தில் இருக்கிறது என வகுப்பது போல.

பௌதீக அணுகுமுறை மனித இருப்பை பற்றற்று விலகி, தள்ளி நின்று பார்க்கிறது. கூகுள் வரைபடத்தில் நாம் இருக்கும் இடத்தில் இருந்து போக விரும்பும் இடத்தை செயற்கைக்கோள் விழிவழியாக மேல் நோக்கு பார்வை கோணத்தில் இரண்டு தொடர்பற்ற புள்ளிகளாக காண்பது போல. ஆனால் மனிதனின் இருப்பை உணரச்செய்யும் வாழும் உடல்  தான் அமையபெற்றுள்ள நோக்குநிலையில் (oriented) இருந்து வெளியை உருவகிக்கும் சாத்தியம் கொண்டது. தன்னிலையை, இந்த வெளியால் உருவாக்கப்படும் அனுபவம் கொண்டு மட்டுமே உணரக்கூடியது. அதே கூகுள் வரைபடத்தில் பிரயாணத்தை தொடங்கியபின், தொடங்கும் புள்ளி நம் நோக்குநிலையின் அடிப்படையில் சுற்றத்துடன் வெளிப்பட்டு விரிவதை (projected) போல. இது அனுபவத்தால் வடிவம் பெரும் உலகம்.

இந்த உலகில், வாழும் உடல் ஒரு குறிப்பிட்ட வழியில் உறுதியாக ஈடுபட்டுக்கொண்டிருப்பதன் பொருட்டு அர்த்தம் கொள்கிறது. இவ்வுலகம் நம் அனைவராலும் பகிரப்பட்டு, ஒவ்வொருவரும் உறுதியாக ஈடுபட்டுகொண்டிருக்கும் ஒன்றாகும் (being-in) . எ.கா. கல்லூரி வகுப்பறையில் பேராசிரியர். ஒரு பேராசிரியராக இருப்பதன் அர்த்தத்தை உருவாக்கும் கல்வி உலகின் நடைமுறைகளில் ஒருவர் எவ்வாறு ஈடுபட்டுள்ளார் என்பதை குறிக்கிறது – மாணவர்களுக்கு விரிவுரை வழங்குதல், தேர்வுத்தாள்களை மதிப்பிடுதல் போன்றவை. எனவே  உலகம் என்பது மனிதன் கொண்டிருக்க கூடிய அல்லது விட்டு விடக்கூடிய ஒரு தற்செயலான விருப்பத்தேர்வு அல்ல. மனிதனாக இருப்பதன் காரணத்திற்கும், அவன் இருப்பிற்கும் அவசியமானது.

உலகம் என்பதை வழக்கமான அர்த்தத்தில் ஒரு இடஞ்சார்ந்த கொள்கலன் (spacio-temporal container) அல்லது பொருட்களின் கூட்டுத்தொகையாக புரிந்து கொள்வது முழுமையானதன்று. மாறாக, இதுவே நாம் வாழும் இடம். இது நம் வாழ்க்கையின் அர்த்தத்தை கொண்டிருக்கும் பொது அமைப்பாகும். இதையே பொன்டி (Maurice Merleau-Ponty) “என் இருப்பை திட்டவட்டமாக எடுத்துக்கொண்டால், இந்த வாழும் உடலில் இருந்தும்  உலகில் இருந்தும் பிரிக்கமுடியாதது அது” என்கிறார் . பொன்டி (Maurice Merleau-Ponty) தன்னுடைய உணர்தலின் தோற்றவியல் (phenomenology of perception) நூலில், மனிதனுக்கான உலகம் என்பது வெறும் வடிவியல் இடமோ, அல்லது பொருட்களின் எடையை தாங்கிக்கொண்டிருக்கும் பிராந்தியமோ அல்ல, அது அவனுக்கான தனித்துவமான களம் (field). அதுவே அவன் இருப்பை உறுதிப்படுத்தும் பின்னணி என்கிறார். 

இங்கு களம் என்ற சொல்லாட்சி முக்கியமானது, ஏனென்றால் அதுவே நாம் அக்கறை கொண்டுள்ள இடம்சார்ந்த உணர்வை வெளிப்படுத்துகிறது. கால்பந்து விளையாட்டு களம் என்பது கீழே பரவியுள்ள ஒரு நிலம் அல்ல, அதுவே விளையாட்டுவீரனாக உணர வைப்பது. நாம் அமைந்துள்ள களத்தில் புலனுணர்வுகளின் ஈடுபாட்டின் முதன்மையே முதலில் நமக்கு விஷயங்களைப் பற்றிய விஞ்ஞான பார்வையை ஏற்றுக்கொள்வதை சாத்தியமாக்குகிறது. அனைத்து பகுத்தறிவு, மதிப்பு மற்றும் இருப்பிற்கும் முன்கூட்டியே அனுமானிக்கப்பட்ட அடித்தளமாக அது அமைந்துள்ளது. நாம் உணர்வது ஒரு கட்டமைக்கப்பட்ட மற்றும் ஒருங்கிணைந்த முழுமை, அங்கு புலனுணர்வு சார்ந்த ஒன்று எப்போதும் வேறொன்றின் நடுவில் இருக்கும், அல்லது வேறு ஏதோ ஒரு களத்தின் பகுதியாகவோ இருக்கும். எனவே தனிமைப்படுத்தப்பட்ட பொருள் அல்லது தோற்றம் என்று எதுவும் இல்லை.

ஒரு கதவு என்பது சுவரில் இருக்கும் ஒரு திறப்பு மட்டும் அல்ல; அது “உள்” மற்றும் “வெளி” எனும் இரண்டு இடங்களை இணைக்கும் செயல்பாடாகும். கதவின் பொருள், அது இருக்கும் இடத்துடனான உறவில் உருவாகிறது. அதே கதவு உடைந்து வெளியே கிடக்கும்போது, அதற்கு அர்த்தம் இல்லாமல் போய்விடுகிறது. ஒருங்கிணைந்த முழுமையில் உள்ள உணர்வுகளுடன் தொடர்புறுத்தப்படும் படும் போது மட்டுமே ஒரு தனி உணர்வு அர்த்தமுள்ளதாக அமைகிறது. பொருட்களின் அர்த்தம் நாம் அமைந்துள்ள மற்றும் சம்பந்தப்பட்ட உணர்வுகள் மூலம், இந்த உடல் பொது இடத்துடன் கொண்டுள்ள நோக்குநிலையால் வெளிப்படும் விஷயங்களைப் பயன்படுத்துவதன் மூலமும், கையாளுவதன் மூலமும் தன்னிச்சையாக ஒன்றிணைகிறது. என் வீட்டருகே இருக்கும் காட்டு வாகை வெறும் நிழற்குடை மட்டும் அல்ல. அந்தி நேரத்தில் நண்பர்களுடன் கூடும் சபை, ஓய்வு நேரத்தில் புத்தகம் வாசிக்கும் இடம், அடர்மழையில் சில்லென சாரலில் ஒதுங்கும் இடம், இப்படி பல.

பொருட்களுடன் நமக்கு உள்ள எந்தவொரு கருத்தியல் உறவும் நம் சொரூபம் கொண்டிருக்கும் உணர்வுக்கும் உலகத்திற்கும் இடையிலான தடையற்ற இயங்கியல் ஒருங்கிணைப்பை அடிப்படையாகக் கொண்டது. பொன்டி இக்கருத்தை உடல் வடிவமைப்பு (bodily schema) என்ற தத்துவப்பார்வையின் வழியாக விளக்குகிறார். அவர் பார்வையில் மனித அனுபவம் என்பது சிந்தித்து,பிரதிபலித்து உருவாவதில்லை. மாறாக அது சிந்தனைக்கு முந்தைய உணர்வுச் செயல்பாடு. ஓர் அடிப்படை ஒழுங்கமைவு. மனித உடல் புறவுலகத்துடன் கொண்டிருக்கும் புலனியக்கம் சார்ந்த பற்றுதலே நம் அடிப்படை அனுபவத்தை நிர்ணயிக்கிறது. உலகுடனான நம் உறவு சிந்தனையை மட்டும் சார்ந்ததல்ல. அது உடல் வழியே நிகழும் ஒரு கூட்டு விளைவு. இதனால், சிந்தனைக்கு முந்தைய அனுபவங்களும் அவற்றில் உறையும் அர்த்தங்களும் இணைந்த ஒரு சிக்கலான வலை நம் இருப்பின் பகுதியாக உள்ளது.

மனிதன் அமைந்துள்ள மற்றும் உருவகப்படுத்தப்பட்ட நோக்குநிலை கொண்ட உலகில் உள்ள விஷயங்களை உடல் வடிவமைப்பு (bodily schema) மூலம் உணர்கிறான் என்றால், அந்த நோக்குநிலை விசர்ப்புத்தி, இன வேறுபாடு, பாலியல் வேறுபாடு, உடல் ஊனமுற்றோர் போன்ற பிற உடல் வடிவமைப்பு கொண்டவர்க்கு என்னவாக இருக்கும்? இத்தகைய உடலியல் அம்சங்கள் அவர்கள் உருவகப்படுத்தப்பட்ட வழிகளைத் தேர்வுசெய்வது மட்டுமல்லாமல், தன்னிலைக்கும் உலகத்திற்கும் இடையிலான இயங்கியல் ஒருங்கிணைப்பை சீர்குலைக்கம் வாய்ப்பையும் கொண்டுள்ளது.

பிரெஞ்சு ஆதிக்க காலனியில் குடியிருந்த கறுப்பினத்தை சேர்ந்த மனநல மருத்துவரும், இருத்தலியல் தத்துவ வாதியுமான பிராண்ட்ஸ் பானொன் (Frantz Fanon) நாம் வழக்கமாக எடுத்துக்கொள்ளும் உலகத்தின் மீதான முன்பகிரப்பட்ட உணர்வு, காலனித்துவ மக்களுக்கு அதே வழியில் இருப்பதில்லை என்கிறார். பொது இடத்தில் தன்னை ஒரு ஐரோப்பிய குழந்தை கைநீட்டி கறுப்பர் என அழைக்கும் போது தன் இருப்பு உடைக்கப்படுகிறது. ஒரு வெள்ளை ஐரோப்பிய உலகத்தை இணைக்கும் பகிரப்பட்ட அர்த்தங்கள் மற்றும் ஊடும்பாவுமாக நெய்யப்பட்ட நடைமுறைகளில் இருந்து தான் வலுக்கட்டாயமாக விடுபட்ட இழை போல உணர்வதாக குறிப்பிடுகிறார். இதன் காரணமாக குழப்பத்துடனும், அந்நியமயப்படுத்தப்பட்டும், அசையமுடியாதவராகவும், செயலற்று இருப்பதாகவும் உணர்வதாக கூறுகிறார். இதனால் உலகதிற்குள் விரிந்து செல்லும் வாய்ப்பு தடைபட்டு, பொது செயல்களில் ஈடுபடமுடியாமல் போவதாகவும், மொத்தில் அவர் ஒரு பொருளாக மாற்றபட்டு தன்னிலையை இழந்தாக உணர்கிறார். உடல் வடிவமைப்பைகொண்டு பொது சூழலில் உள்ள அர்த்தத்துடன் ஒருங்கிணைந்து வாழும் உடலின் அனுபவங்களை பெருக்கிகொள்ளும் சாத்தியம் அமையப்பெற்ற சூழலில் மனிதன் தன்னிலையை உணர்கிறான். வாழும் உடலுக்கான சாத்தியங்கள் அகற்றபட்டு வெறும் தூல உடலாக மட்டுமே எஞ்சக்கூடிய உலகில் மனிதன் மற்றமை ஆகிறான்.

இந்தியா வந்த ஜமைக்காவைச் செர்ந்த பெண் தன்னிலையை உணர்ந்ததற்கு காரணம் என்ன? அதை இன்னொருவரால் அறிய முடியாமலேயே போகலாம். ஏனென்றால் தன்னிலை என்பது பிரக்ஞை அறியும் உண்மை அல்ல. வாழும் உடல் அறியும் உண்மை.

விவேக்

பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிகிறார். இலக்கியம் மற்றும் தத்துவத்தில் ஆர்வம் கொண்டு பயின்று வருகிறார்.

புதன், 5 நவம்பர், 2025

Coach par excellence

வேர்ல்ட் கப் சாம்பியன் டீமின் கேப்டன்...

ஒருவரில் காலில் விழுகிறார்... என்றால்...

அவர் யார்..!? அவரை அடையாளம் தெரிகிறதா..?!

இமயம் அளவுக்கு உயர

இவ்வளவு திறமைகள் இருந்தும்...

இப்படியும் அதிர்ஷ்டம் இல்லாத ஆளா..!

இவரால் ஏன் புகழ்பெற முடியவில்லை...

இவருக்கு என்னதான் தடை...யார்தான் எதிரி..?

--- என்று 1990களில் துவங்கி 2000களிலும் ஒருவரை பற்றி புரியாமல் குழம்பி முழித்தேன் என்றால்... அவர் தான்... #அமோல்_மஜும்தார்.

தனது முதலாவது ரஞ்சி டிராபி போட்டியில், ஹரியானா அணிக்கு எதிராக பாம்பே அணி சார்பில்... 260 ரன்கள் குவித்து உலக சாதனையுடன்... 1994ல் கிரிக்கெட்டில் அதிரடி எண்ட்ரி கொடுத்தவர்.

அதன் பிறகு உள்ளூர் போட்டிகளில் ஒவ்வோர் ஆண்டும் மலை அளவுக்கு ரன்கள் குவித்தவர்.

"புதிய டெண்டுல்கர்"... "அடுத்த சச்சின்"... என்றுதான் அவரை பத்திரிகையில் புகழ்ந்து தள்ளி எழுதுவார்கள்.

ஒவ்வொரு முறை இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு வரும்போதும்...

"என்னது... இந்த முறையும் அமோல் மஜும்தார் செலக்ட் ஆகலையா..?!" என்கிற கேள்வி தவறாமல் இடம்பெறும்.

ஆனால்.,. கடைசி வரைக்கும் உள்ளூர் போட்டிகளில் மட்டுமே ஆடினார். ஒரு முறை கூட இந்திய அணிக்கு தேர்வாகி சர்வதேச போட்டிகளில் அவர் ஆடவே இல்லை... என்பது இன்றுவரை யாருக்குமே விளங்காத புரியாத புதிர்.

2013 வரை இந்திய ஃபர்ஸ்ட் கிளாஸ் டொமாஸ்டிக் கிரிக்கெட்டில் 171 போட்டிகள் விளையாடி, 48.13 ஆவரேஜில், 11,167 ரன்கள் குவித்தார். இதில் 30 செஞ்சுரி 60 பிஃப்டி அடித்திருக்கிறார்.

இவர்தான்....

இன்று ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்ற சாம்பியன்களான இந்திய பெண்கள் அணியின்... தலைமை பயிற்சியாளர்..!

ஆம். இன்று... வேர்ல்ட் சாம்பியன்களாக வானில் மின்னி ஜொலிக்கும் வைரங்களை கடந்த 2 வருடங்களாக பட்டை தீட்டிய... #கோச்_அமோல்_மஜும்தார்..!

லீக் மேட்ச்களில் அதிரடியாக ரன்கள் குவித்த ஓபனிங் பேட்டர் பிரதிகா ராவல் காயம். அவரால் நடக்கவே முடியாது. வீல் சேர்தான் என்று அரை இறுதி போட்டிக்கு முன்பு திடீர் இடர் ஏற்படுகிறது.

சென்ற வாரம் வீட்டில் அமர்ந்து நம்மை போல டிவியில் வேர்ல்ட் கப் கிரிக்கெட் பார்த்துக்கொண்டு இருந்த ஒருவரை...

கூட்டி வந்து... நேராக அரை இறுதியில் ஓபனிங் ஆட இறக்கினார்... கோச் மஜும்தார்.

அவர் 10 ரன்னில் அவுட் ஆனார்.

ஆனாலும்...

மனம் தளராமல் நம்பிக்கை வைத்து அவரையே...

இறுதி போட்டியிலும் ஓபனிங் இறக்கினார்.

78 பந்துகளில் 87 ரன்கள். 2 விக்கெட்.... என்று கோப்பை வெல்ல முக்கியமான காரணமாக இருந்து...#ஆட்டநாயகி விருது பெற்றார் #ஷிஃபாலிவர்மா.

கோச் என்றால் இப்படி இருக்க வேண்டும்..!

பாராட்டுகள் & வாழ்த்துகள் அமோல்..

நடிகர் விஜய் படத்தில் பார்த்த காட்சிகளை நிஜத்தில் நிகழ்த்தி காட்டிய அமோல் தான் Real Hero..!!

பகிர்வு -தென்றல்

செவ்வாய், 4 நவம்பர், 2025

thought you would enjoy this

In 2009, famous Italian freediver Enzo Maiorca was diving with his daughter Rossana near the coast of Syracuse when something truly special happened.

As he was going deeper into the water, Enzo suddenly felt a soft tap on his back. When he turned around, he saw a dolphin—not there to play, but clearly asking for help.

The dolphin swam down, and Enzo followed. About 15 meters below the surface, they found another dolphin stuck in an old fishing net. Without wasting a moment, Enzo called to his daughter for a knife and carefully cut the net to free the dolphin.

As soon as it was free, the dolphin made a sound Enzo later described as “almost like a human cry.”

When they all reached the surface, Enzo and Rossana saw that the dolphin was a pregnant female—and just moments later, she gave birth right there in the open sea.

The male dolphin circled around them, then gently came up to Enzo, touched his cheek with its nose—like a soft kiss—and then swam away with his new little family.

Later, Enzo shared his thoughts:
“Until people learn to respect and communicate with the natural world, they’ll never truly understand their place on this planet.”

A strong reminder that nature has a voice—if we’re willing to listen.
Credit to the original source.

புதன், 8 அக்டோபர், 2025

திண்ணையில் நடந்த டிஜிட்டல் டீடாக்ஸ்!


இப்படியும் ஒரு சம்பவம் நடக்கும் என்று நான் நினைத்து கூட பார்க்கவில்லை.

இப்படித்தான் எல்லோரும் சொல்லிக் கொண்டு தங்களை பற்றிய ஒரு ஆதர்சன கனவுகளை ஏற்படுத்தி வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.

அப்படி என்ன நடக்க முடியாதது நடந்து விட்டது?

நீ நினைத்துக் கூட பார்க்க முடியாதது என்று ஏதாவது இந்த உலகத்தில் உள்ளதா!

நாம் நம் மனதில் கோபம், காமம், பொறாமை, கர்வம் ஆகிய முகங்களை சுமந்து கொண்டு திரிகிறோமே? அது தெரியாமல் அப்படி என்ன நடந்து விட்டதாக என் நண்பன் சொன்னதை உங்களுடன் பகிர்கிறேன்.

ஏஐ-ஐ திறந்து ஆகிவிட்டது; Youtube அரட்டை, x- troll , இன்ஸ்டா உடான்ஸ், பேஸ்புக் லைக் எல்லாம் போர் அடிக்க இந்தப் பக்கம் வந்தான் நடேசன்.

அவன் ஏற்கனவே ஏற்பாடு செய்யப்பட்ட பொது புத்தியுடைய, மாற்று சிந்தனை ஏற்படுத்தக்கூடிய ஒரு செயற்கை நுண்ணறிவு பெட்டகம் -ஏஐ முன் கையை சொடிக்கி, 'என் பொறாமை, காமம், கர்வம், கோவம் ஒழிக்க என்னால் முடியவில்லை; அதற்கு மாறாக என்ன செய்தால் இந்த தீய குணங்களை குறைக்க முடியும்? என்று கேட்க,

அதற்கு அது ஒரு புத்தகமே எழுதி விடும் அளவிற்கு செய்தியை தர, அதை விட்டு ஒழித்து கூகுள் நோட்புக் LM language model முன் வந்து தன் விளக்கத்தைக் கேட்டான்.

அது ஒரு விளக்கம் தந்தது. அந்த விளக்கம் முற்றிலுமாக வேறுபாடாக இருந்தது. மேலும் இத்தகைய மனித இயல்புகளை முற்றிலுமாக விட்டு ஒழித்தால் சித்து பிடித்து சித்தனாக வாய்ப்புள்ளதாக கூறியது.

உடனே அவன் என்னிடம் வந்தான். நான் அவனை என் வீட்டு திண்ணையில் உட்கார வைத்து அவன் செல்போனில் உள்ள எல்லா அப்ளிகேஷன்ஸையும் முழுமையாக அன்இன்ஸ்டால் செய்து ஒரு யோசனை கூறினேன்.

அதாவது நீ தினமும் என் வீட்டுக்கு வர வேண்டும். நாம் திண்ணையில் உட்கார்ந்து ஒரு இரண்டு மணி நேரம் பேசுகிறோம்.

அவ்வாறு ஜாலியாக பேசும் போது முடிந்தால் சைட் அடித்து அப்படியே ஒரு அப்ளிகேஷன்ஸ் போட்டு வாரத்திற்கு ஒரு முறை ஒரு சினிமாவிற்கு சென்று வருவோம். 

அப்படியே பக்கத்து வீட்டு அக்கப்போர்களை பேசி விவாதித்து ஒரு விவாத மேடையை நமக்குள்ளே உருவாக்குவோம்.

வீட்டில் டிவி முன் சீரியல் பார்ப்பதை விட்டுவிட்டு நம் உடலில் ஏற்படும் பல சீரியஸ் உபாதைகள் பற்றி விவாதித்து அதற்கான தீர்வுகளை நமக்கு நாமே கண்டு ஆராய்ந்து ஒரு கலந்தாய்வு செய்வதாக எங்கள் இருவருக்கும் ஒரு கருத்து உடன்படிக்கை ஏற்பட்டது.

இவ்வாறாக 'செல்போன் அடிக்சன்' என்று சொல்லி வந்த என் நண்பனுக்கு ஆறுதல் கூறி அவனை கண்காணித்து வருகிறேன்.

முடிந்தால் நீங்கள் ஏதாவது அறிவுரை கூறலாம்! நன்றி! வணக்கம்!!

https://kalkionline.com/lifestyle/motivation/ai-and-cell-phone-addiction-digital-detox-tech-addiction-solutions