புதன், 11 பிப்ரவரி, 2026

கரையெல்லாம் செண்பகப் பூ.

சுஜாதா: என்ன வகை எழுத்து?      
--
புதுமைப்பித்தன் 'சாபவிமோசனம்'
போலவோ,தி.ஜானகிராமனின் 'சிலி
ர்ப்பு'போலவோ கு.ப.ரா வினுடைய ' ' "விடியுமா?போலவோ,கு.அழகிரிசாமி
யின் கதைகள் போலவோ சுஜாதாவின்
வாசகனுக்கு எதிர்பார்ப்பில்லை‌.எழுத்தி
ற்கேற்ப தன் வாசகர்களைக் கச்சித
மாகத் தயாரித்து வைத்திருந்தார்.

ஒரு கதையில் ஆம்பிளைங்க செய்
யற  அத்தனை காரியத்தையும் இந்த பெண்களால் செய்யமுடியுமா' என்று
கேட்டார்.ஆணைப்போலப் பெண்ணா
ல்  உயரத்திற்கு ஸ்விங்..என்று ஒண்
ணுக்கடிக்கமுடியுமா என்று கேட்டார்.
இது நகைச்சுவை.   பின்னால் ஒரு சினிமாவில் அவர் எழுதிய வசனமாக
வும் வந்தது.இந்தமாதிரி வசனங்களு
க்காகவே எழுத்தாளர் சாவி அவரைத்
தூக்கிவைத்துக் கொண்டாடினார்.40
வருஷம் அதிதிரளான வாசகர்களைத்
தன் மடியில் உட்கார்த்தி வைத்துக்
கொண்டிருக்க முடிந்தது சாதனை
தான். "என் வீட்டு சலவைக் கணக்குத்
துண்டுப் பேப்பரை வாங்கிப் பிரசுரிக்
க பத்திரிகை இருக்கிறது என்று ஸ்டே
ட்மெண்ட் விடுமளவிற்குப் பிரபலப்
படுத்திக்கொண்டார்.சாவி அவரது
சலவைக் கணக்கு நோட்டுப் புத்தகக்
குறிப்புகளையும் தன் பத்திரிகையில்
வெளியிட்டார் என்பதுண்டு.

அதேநேரம் இன்னொருவேலையை
யும் உடன் செய்துகொண்டிருந்தார்.பார
தியின் "காக்கைப் பார்லிமெண்ட்" நம்
புதுமைப்பித்தனின் 'கடவுளும் கந்த
சாமிப்பிள்ளையும்" போன்ற படைப்பு
களையும் அவ்வப்போது பேசிவந்தார்.
"காசளவில் உலகம்" என்ற கதையை
யும் அப்போதுதான் வெளியிட்டார். 

சுஜாதாவிற்குக் கைக்கொடுத்தவை சிறுகதைகள்தாம்.அவ்வப்போது நிக
ழும் நிகழ்ச்சிகளைத் துண்டு துணுக்
குகளாக்கிச் சுவாரசியப் படுத்தினார்.
இடைவெளி ஏதுமில்லாமலிருக்க இந்தத்துணுக்குகள் உதவின.நடுத்தர
வர்க்கங்களின் பிரச்சனைகள்தாம்
தேசத்தின் பிரச்சனைகள்.தேசத்தை
வெறுப்பதற்கும் ஆனந்திப்பதற்கும்
நிறைய விஷயங்கள் இவருக்கு அரு
கிருந்தன.கொண்டாடுவது அல்லது
துயரத்தில் ஆழ்ந்து புலம்புவது என
" ரெண்டுங்கெட்டான்தனம்" நடுத்தர
வர்க்கத்தின் வாழ்வியல் அடிப்படை.
சுஜாதா இதைக் கெட்டியாகப் பிடித்து
க்கொண்டார்.

அவரது கதைகளில்"சில வித்யாசங்க
ள் முக்கியமான கதை.'நான் ராஜாரா
மன் டில்லிவாசி நேபாளத்தின் தலை
நகரம் தெரியாததாலும் ஆஸ்ரேலியா
வின் ஜெனத்தொகை தெரியாததாலு
ம் ஐஏஎஸ் தொடராமல் மத்தியசர்க்கா
ர் செக்ரட்டேரியட்டில் ஒரு சாதாரண
210-10-290-15-150 சம்பள ஏணியில்
இருப்பவன் என்று தொடங்குகிறார்.
அட.. ..இது நம் கதை என வாசகனும்
விழுந்தடித்துக் கொண்டு வருகிறான்.

கொஞ்சம் நேரமிருந்தால், மனசிருந்
தால் சிறுபத்தியை தட்டி நீட்டி  ஒரு
புதினமாக ஆக்கிவிடலாம்.தத்துவத்
தேடல்களோ ஆழ்மனப் பிரச்சனை களோபிரதானமல்ல.மனிதனின் வெ
ற்றிகரமான அனுபவங்களோ பெரிதி
ல்லை.எதையும் வாசகனிடம் கொடு
த்து படிக்க வைத்து விடுவது. இதை
அறிவித்துவிட்டே எழுதினார்.

புதுமைபித்தனைப் படித்ததும் சுதந்தி
ரமாக அவருடைய பாதிப்பு இல்லாமல்
எழுதத் தைரியம் வேண்டும்.நன்றாக
எழுதபவர்களின் பட்டியலில் உள்ள
அனைவரிடமும் புதுமைப்பித்தன்
பாதிப்பு இருப்பதை எந்தக் கோர்ட்டி
லாம் சாட்சியாகச் சொல்லத்தயார்
என்றார்.நல்லஎழுத்து கைவசப்பட்டும்
வலிந்தே ஜனரகப்படுத்தினார்.அறிவி
யல் வளர்ச்சிக்கேற்ப கலைகளையும்
இலக்கியங்களையும் மாற்றியமைக்
கும் முயற்சி இருந்தது.

எழுத்து என்பது தினம்தினம் உட்கார்
ந்துகொண்டு கட்டாயமாக எழுதுவது,
நெஞ்சிலிருக்கும் மேதைத்தனம் என்ற ஜீவஒளிக்குக்   காத்திருப்பது அன்று..  திரும்பத்திரும்பத் திரும்ப அதையே
எழுதுவது,    மகிழ்ச்சியோ  வலியோ
எழுதுவது, எழுதியதில் திருப்தியில்
லாமல் நிறையக்கிழித்துப்போடுவது
எழுதியதில்  துளி திருப்தி இல்லாமல் இருப்பது, மேலே எழுதுவது சுஜாதாவி
ன் அடிப்படை எழுத்து நியாயம் என்பது
இதுதான்.அநேக பத்திரிகைக்காரர்
கள் அவர் வீட்டுத்திண்ணையில் காத்
குக் கிடந்தனர் என்பதும் உண்மையே.

வாழ்க்கை சாசுவதமான அவதானிப்பு
தான்.பாத்திரங்கள் மாறிக்கொண்டிரு
ப்பார்கள்.ஒன்றுமட்டும் உண்மை.இரு
ப்பது ஒரேபிறவி.வாழ்வது ஒரேமுறை
தான்.எனவே வாழ்க்கை ஒன்றன்று.
நிறைய தடவை நாம் இங்கு வாழ்
ந்திருக்கிறோம்.இந்த அடிப்படைதான்
சுஜாதா எழுத்தின் சூட்சுமம்‌.மின்னல்
வெட்டும் நடை என்பது இலக்கிய 
வளமை கனத்தைக் சிதைத்துவிடும்‌.
துப்பறியும் கதைகளுக்கேயுரியது.
ஆனால் இந்த மின்னல் வெட்டும் ஓரு நடைதான்  பின்னால்  நம் சுஜாதா
வின் அசல் நடையாக மாறியது.வாசக
ரோடு இந்த நடையால் மனம் விட்டுப்
பேசமுடியாது.லாசரா வாசித்த வாச
கர்களுக்கு சுஜாதா எந்தவகையிலும்
பொருத்தமற்றவர்.

தி.ஜா,எம்விவி,க.நா.சு,கு.ப.ரா,மௌனி, கு.அழகிரிசாமி,புதுமைப்பித்தன்
போன்றோரின் எழுத்துக்களை அறி
ந்திருந்தாலும் கவைக்குதவாது எனப்
புரிந்திருந்தார்.புகழுக்கோ,பெயருக்
கோ,பிராபல்யத்திற்கோ ஆகாது என்
பதில் தெளிவாக இருந்தார்.ஒரு படை
ப்பாளி புகழ்பெற விரும்புவது பிழை
யில்லை‌.எப்படி புகழடைகிறார் என்ப
துதான் மிகமிக முக்கியம்.தொண்டர்
படையின் மூலமோ, சந்தைப்படுத்து
தல் மூலமோ அதை நிறைவேற்ற
முயல்வது சரியானதா என்று கேள்வி
தவிர்க்க முடியாததுதான். கரையெல்
லாம் செண்பகப் பூ...வாசித்தபோது....
....
---
(என் கட்டுரையின் பகுதி)
--மீள்*

சனி, 17 ஜனவரி, 2026

கல்மண்டபம்

"கல்மண்டபம் " நாவலை வழக்கறிஞர் சுமதி அவர்கள் வெளியிட்டு நேற்றோடு 25 ஆண்டுகள் கடந்து விட்டன. அலையன்ஸ் பதிப்பக வெளியீடு. தமிழின் நாவல் உலகப் பிரதேசத்தில் இதுவரை யாரும் தொடுவதற்கு அஞ்சிய ஒரு கதைக் கருவைத் தேர்ந்தெடுத்து எழுதிய சுமதியின் துணிச்சல் சாதாரணமானது அல்ல. பிராமணர்களின் இறுதிச் சடங்குகளை செய்யும் சவுண்டி பிராமணர்களின் அவல நிலையையும், அவர்களை இழிவாக நடத்தும் உயர்தட்டு பிராமணர்களையும் மிகச் சிறப்பாக படம் பிடித்துக் காட்டும் நாவல் இது.இலக்கிய வரலாற்றில் மிக முக்கிய இடத்தைப் பிடித்து விவாதங்களை எழுப்பி இருக்க வேண்டிய சுமதியின் நாவல்  கவனமாக இலக்கிய உலகத்தால் சைட்லைன் செய்யப்பட்டது.
சென்னையில் சவுண்டி பிராமணர்கள் ஒன்று சேர்ந்து வேலைக்காக காத்திருக்கும் இடம்தான் கல் மண்டபம். அதையே இந்த நாவலின் தலைப்பாக சுமதி அவர்கள் வைத்திருந்தார்.
புத்தக வெளியீட்டு விழாவில் சோ, இல. கணேசன், தமிழருவி மணியன், வழக்கறிஞர் அருள்மொழி ஆகியோருடன் நானும் மேடையைப் பகிர்ந்து கொண்டு நான் பேசிய பேச்சை இன்று நினைத்துப் பார்க்கிறேன் .  
 " இந்துக்கள் தங்கள் ஜாதி விஷம் கலந்த மூச்சுக்காற்றினால் மொத்த வாயு மண்டலத்தையும் அசுத்தப்படுத்தி விட்டார்கள். அசுத்தப்படுத்தப்பட்ட அந்த காற்றை சுவாசித்த கிறிஸ்தவர்களும் இஸ்லாமியர்களும் ஜாதி நோய்க்கு ஆளாகி விட்டார்கள். நாடார் கிருத்துவர்களும் வேளாளர் கிறிஸ்தவர்களும் எங்கிருந்து வந்தார்கள்? இயேசு சொன்னதாகத் தெரியவில்லையே? லெப்பைகளும் மரைக்காயர்களும் எங்கிருந்து வந்தார்கள்? நபிகள் நாயகம் சொன்னதாகத் தெரியவில்லையே. அப்படியானால் இந்து மதம் இந்து சமூகத்தை மட்டும் கறை படுத்தவில்லை. மொத்த இந்திய சமூகத்தையும் மாசு படுத்தி இருக்கிறது." என்று மேடையில் சோ, இல.கணேசன் , தமிழருவி மணியன் ஆகியோரை வைத்துக் கொண்டு நான் பேசியதற்கு எனக்குப் பின் பேசிய அவர்கள் ஏதும் பதில் சொல்லவில்லை.
 எனக்குப் பின் பேசிய வழக்கறிஞர் அருள்மொழி சுமதி நாவல் பற்றி மிக அற்புதமாகப் பேசினார்.
 வேலை பளுவின் காரணமாக அடுத்த நாவலை எழுதுவதைத் தள்ளிப் போட்டு வரும் சுமதி விரைவில் தனது அடுத்த அபூர்வமான கதைக்கருவை எழுத வேண்டும் என்று எல்லா புத்தகங்களையும் தேடிப் படிக்கக்கூடிய  
 ஒரு ஓரத்து வாசகன் என்ற வகையில்
 நான் விண்ணப்பம் வைக்கிறேன்.

செவ்வாய், 30 டிசம்பர், 2025

A Poet

https://youtu.be/kxxVdYKhFk4?si=NZS-MFDDdujVFbea



சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட ஒரு கவிஞனின் கதைதான் 'A Poet'.

இதுவொரு Spanish மொழி திரைப்படம்.

Genre:Tragic comedy film.

இந்த வருடம் (2025)மே மாதம் நடந்த கேன்ஸ் திரைப்படவிழாவில் இத்திரைப்படம் பங்கெடுத்து பரிசையும் வென்றது.

கவிஞர் கதாபாத்திரத்தில் நடித்த உபிமர்ரியாஸின் தோற்றம் ஓரளவிற்கு நமது நடிகர் நாகேஷின் தோற்றத்தை ஒத்துயிருக்கும்.

கதாபாத்திரத்திற்கேற்ற அருமையான தேர்வு இந்த நடிகர்.

Spoiler alert:வேலையில்லை;அதனால் சமூகத்தில் மதிப்புமில்லை.

மனைவியும் பெண் பிள்ளையும் இவரை விட்டு பிரிந்து சென்று விட்டனர்.

பென்ஷன் வாங்கி பிழைப்பை ஓட்டும் அம்மாவின் தயவில் வாழ்ந்து வருகிறார் கவிஞர் ஆஸ்கர்.

தீரா குடிப்பழக்கமும் உண்டு.சில வேளைகளில் நடைபாதையிலேயே தூங்கியும் விடுவார்.

பெண்பிள்ளை மீது மிகுந்த பாசம் உடையவர்.மனைவியால் அவமானப்பட்டாலும் மகளைப் பார்ப்பதற்காக செல்வார்;பேசுவார்.செலவுக்கு மகளிடமிருந்து பணமும் வாங்கிக் கொள்வார்.

இரண்டு,மூன்று கவிதைத் தொகுதிகளை வெளியிட்டும் தனக்கு சமூகத்தில் தனக்கு சரியான அங்கீகாரம் கிடைக்க வில்லையே என்கிற கவலை இவருக்கு எப்பொழுதுமே உண்டு.

"அம்மா மட்டும் இல்லேன்னா இந்த வீடு கூட உனக்கு கிடைச்சு இருக்காது"என்று சொல்லி அவமானப்படுத்துவாள் இவளுடைய சகோதரி.

இருந்தாலும் அவளே இவருக்கு ஒரு பள்ளிக் கூடத்தில் Poetry teacher வேலை வாங்கிக் கொடுக்கிறாள்.

வேலைக்கு செல்கிறார்.தனது வகுப்பில் உள்ள ஒரு மாணவியை தேர்ந்தெடுத்து கவிதையில் புலமையாக்க முயற்சிக்கிறார்.அவளும் இவருடைய முயற்சியின் மீது அக்கறை கொண்டு கவிதை எழுதுவதில் முயற்சி எடுக்கிறாள்.

கவிதைப் போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசும் வாங்குகிறாள்.

அதனால், பள்ளி நிர்வாகம் சந்தோஷமடைந்து பார்ட்டி ஒன்று வைக்கிறது.

அந்த பார்ட்டியில் அந்த மாணவி மதுபானத்தை அதிகமா அருந்தி நிலைகுலைகிறாள்.வாந்தி எடுக்கிறாள்.

அவளை வீட்டில் கொண்டு போய் சேர்க்கும் பொறுப்பு இவருடையதாகிறது.

சுயநினைவேயில்லாமல் இருக்கும் அவளை தனது காரில் ஏற்றிக்கொண்டு அவளுடைய வீடு நோக்கி செல்கிறார்.

வீட்டை அடைந்தவுடன் அவள் இருக்கும் நிலையைப் பார்த்து தன் மீது சந்தேகப்படுவார்கள் என நினைத்து அவளுடைய வீட்டின் படிக்கட்டின் மீது போட்டு விட்டு செல்கிறார்.சத்தம் போட்டு வெளியே வரும் அவளுடைய வீட்டார் இவள் இருக்கும் நிலையையும் அவர் வேகமாக காரில் ஏறி செல்வதையும் பார்க்கின்றனர்.

சூழல்,அவரை அயோக்கியனாக சித்தரிக்கிறது.அவளுடைய அண்ணன் அவரை நையப்புடைக்கிறான்.

பணத்தாசை பிடித்த அந்த பண்பாடற்ற குடும்பம் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அவரிடமிருந்து பணத்தை பிடுங்க நினைக்கிறது.

பள்ளி நிர்வாகம் பணத்தைக் கொடுத்து அவர்களை சரிகட்ட நினைக்கிறது.

இவரோ பணத்தைக் கொடுத்தால் தான் ஒரு குற்றவாளி என்பதை ஒத்துக்கொள்வது போல் ஆகிவிடும் என்று நினைக்கிறார்.

இதற்கிடையில் மகளும் தந்தையின் மீது சந்தேகம் கொள்கிறாள்.வெறுக்கிறாள்.தன்னால் அவருக்கு ஏற்பட்ட நிலையை புரிந்து கொண்ட மாணவி கவிஞரின் மகளுக்கு கடிதம் ஒன்றை எழுதி அனுப்புகிறாள்.

தந்தையைப் பற்றி தவறாக நினைத்ததை நினைத்து வருந்துகிறாள்.

தந்தை எழுதிய புத்தகத்தை அலமாரியிலிருந்து எடுத்து படிக்க ஆரம்பிப்பதோடு படம் முடிகிறது.

இந்தப் படத்தில் கவிஞராக நடித்த Ubeimar rios-க்கு இதுதான் முதல் படம் என்பதை நம்ப முடியலே.அந்த அளவிற்கு கேரக்டரை புரிந்து கொண்டு மிகவும் இயல்பாக நடித்துள்ளார். 

Co-Produced and Directed by Simon Mesa soto.

இவர், கொலம்பியா நாட்டு திரைக்கதையாசிரியர் மற்றும் இயக்குநருமாவார்.

இவர் இயக்கிய Leidi and Madre குறும்படங்களின் மூலம் பல சர்வதேச விருதுகளைப் பெற்றுள்ளார்.

இவருடைய முதல் Feature film-ஆன 'Amparo' வும் 2021-ஆம் ஆண்டில் நடந்த கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது.

விரைவில் OTT-ல் வரும்.அவசியம் பாருங்கள்.

சேனலை மறக்காமல் Subscribe செய்யுங்கள்.கருத்துக்களை தெரிவியுங்கள்.நண்பர்களுக்கும் பகிருங்கள்.

நன்றி,வணக்கம்.

சே மணிசேகரன்


*****************************************
https://solvanam.com/2016/10/14/ரெயினர்-மரியா-ரில்கே-போய/?utm_source=perplexity

*****************************************
Letters to a Young Poet



நண்பரே! உலகின் மீது நாம் அவநம்பிக்கை கொள்வதற்கு எந்தக் காரணமுமில்லை. தீவிரவாதம் உள்ளதெனில் அது நம்முடையதுதான். பாதாள மெனில் அது நமக்குரியதுதான். அபாயங்கள் உள்ளதெனில் அதை நேசிக்கக் கற்றுக்கொள்ளவேண்டும். தனிமையை நேசிக்கவேண்டும்: அது வேதனை தருவதாக இருந்தாலும் தனிமையை ஏற்கப்பழகுவது வாழ்க்கையின் அர்த்தத்தைப் புரியவைக்கும். நம் போராட்டத்தின் அழகைக் கண்டறிய வேண்டும். அது உண்மையையும் ,நேர்மையையும் உணரச்செய்யும்.
நண்பரே! தீர்மானிக்கப்படாத விஷயங்களுக்கான கேள்விகள் மனதிலிருக்கும். ஆனால் அவைகளுக்கு இப்போது பதில்கிடைக்காது. பதில்களோடு வாழமுடியாத நிலை நமக்கிருப்பதால் எதற்கும் பதில் தேடாதீர்கள். எல்லாவற்றோடும் வாழவேண்டும். கேள்விகளோடு இப்போது வாழுங்கள். நீங்களே அறியாதபடி எதிர்காலத்தில் அந்த பதிலாகவே வாழ நேரலாம்
வாழ்க்கை முரண்பாடுகளால் ஆனது. பகுத்தறிவான பதிலை எல்லாவற்றிலும் எதிர்பார்த்தால் நம்மை நாமே சித்திரவதைபடுத்திக்கொள்வோம்
முழுமையற்ற அறிவுதான் ஒவ்வொரு மனிதனின் விதி என்னும் போது சுயத்தை அறியவேண்டிய வைகறையாக கேள்விகளை விரும்ப வேண்டும். நாம் யாராக இருக்கவேண்டும்,இப்படி ஏன் வாழ்க்கை என்று எல்லாவற்றி லும் கேள்விகளைக் கேட்டுக் கொண்டு நம்மை வருத்திக் கொள்ளாமல் அந்தத் தருணத்தைத் தழுவிக் கொள்ள வேண்டும். வாழ்வது, அனுபவம் பெறுவது என்ற இரண்டும் நமக்கானவை.எல்லாவற்றையும் புரிந்து கொள்ள முடிவதில்லை. காலப்போக்கில் பதில்கள் மேல் விழுவோம்.
நிகழ்காலத்தைவிட கனவுகள் மேலானவை என்று சொல்ல முடியாது. நிகழ் காலமும்,எதிர்காலமும் ஒன்றுதான்.நாம் எதிர்காலத்தைப் பற்றி நம்புவது நிகழ்காலத்தை மாறச்செய்கிறது.நம் கனவுகள் நிகழ்தருணத்தை மாற்றுகின் றன.நம்முடைய மனப்பாங்கு நாம் எதிர்கொள்ளும் விஷயங்களை நல்லதாக்க, தீயதாக்க முடியும்.நம்முடைய முடிவுதான் அதை நிறப்படுத்துகிறது உலகம் நமக்கு மகிழ்ச்சியைத் தரவேண்டுமென்று விரும்பினால் நம்மை மாற்றிக் கொள் ளத் தயாராகவேண்டும். அழகும் கொடுமையும் என்று உனக்கு எல்லாம் நடக்கட்டும்.போய்க் கொண்டேயிரு.எந்த உணர்வும் முடிவல்ல.


**************************************

சனி, 27 டிசம்பர், 2025

ஞாபகம் வருதே ! ஞாபகம் வருதே !!

டீச்சர்… உங்களுக்கு என்னை ஞாபகமிருக்கா ?

சாலையோரமாக நடந்து சென்ற பவானி டீச்சரைக் பின்னால் இருந்து ஒருவர் அழைத்து கேட்டார்.

“யார்… புரியலையே.”

“டீச்சர், இந்த முகத்தை ஒருக்க கவனமாகப் பாருங்க.”

“விளையாடாதேடா, விஷயத்துக்கு வா. எனக்கு முன்னாடி மாதிரி இப்ப கண் பார்வை இல்லடா.”

“டீச்சருக்கு இந்தக் குரலும் அடையாளம் தெரியலையா?”

“இல்லைடா… இத்தனை ஆண்டுகளில் எத்தனை தலைமுறையை நான் பாடல் சொல்லிக் கொடுத்திருக்கேன் எத்தனை பேர் டா ஞாபகத்துல வச்சிருக்க முடியும்.?”

“96-வது பேட்ச்சில் படித்த ஜாஃபர், விஷ்ணு, ஜேக்கப் எல்லாம் டீச்சருக்கு ஞாபகம் இருக்கா?”

அந்த பேட்ச்சை நான் எப்படி மறக்க முடியும்? என் ஆசிரிய வாழ்க்கையில் அதைவிட பிடித்த ஒரு பேட்ச்சே இல்லை. சரி, நீ அந்த பேட்ச்சில் யார்?”

“டீச்சருக்கு அந்த பேட்ச்சிலிருந்த ‘திருடன்’ ஜேக்கப் ஞாபகத்துல இருக்கா?”

“ டேய், அவனை அப்படிச் சொல்லாதே. அவன் ஒரு பாவம். அவன் திருடன் இல்லை.”

டீச்சர் இன்னும் நீங்க அவனுக்கு தான் சப்போர்ட் பண்றீங்களா அவன் திருடுறதை நான் தான் பார்த்து இருக்கேனே அப்பவும் அவனுக்கு சப்போர்ட் பண்ணி காப்பாற்றி விட்டது நீங்க தானே

“ஆம், நான் அவனை காப்பாற்றினேன். ஏன்னா, அவனைப் பற்றி உங்களுக்கு தெரியாத பல விஷயங்கள் எனக்குத் தெரியும்.”

“அதென்ன டீச்சர்?”

“அவனுடைய வாழ்க்கை நிலை அப்போ அப்படித்தான் இருந்தது. வீட்டில் ஒரு வேளை உணவு கூட இல்லாத குடும்பம்.”

ஜேக்கப்பைப் பற்றி சொல்ல சொல்ல டீச்சரின் கண்கள் நிறைந்தது அவர் இறுதியில் அழ ஆரம்பித்தார்

“டீச்சர் அழாதீர்கள். டீச்சருடைய பிரார்த்தனைகள் வீணாகப் போகவில்லை.”

“ஏன் அப்படிச் சொல்கிறாய்? நீ அவனை பிறகு பார்த்தாயா?”

“டீச்சர்… அப்போ நான்காவது பெஞ்சில் உட்கார்ந்து டீச்சரைத் தொந்தரவு செய்த அந்த ‘திருடன்’ ஜேக்கப் நான்தான்.”

இதைக் கேட்டவுடன் டீச்சர் அவனை கட்டிப்பிடித்தார். அடக்க முடியாத மகிழ்ச்சியின் கண்ணீர் அவர் கண்களிலிருந்து தாரைதாரையாக வழிந்தது.

“சாமி, இதை நீ என்கிட்ட இவ்வளவு நேரம் ஏன் சொல்லவில்லை?”

“டீச்சருக்கு என்னைப் பற்றிய அந்தப் பழைய பாசம் இன்னும் நினைவிருக்கிறதா என்பதை அறியவே.”

“அப்படியா! சரி, நீ இப்படி வேஷம் போட்டிருக்கிறாய்? இப்போ என்ன வேலை செய்கிறாய்?”

“இது வேஷம் இல்லை டீச்சர். நான் இப்போது இந்த ஸ்டேஷனின் எஸ்.ஐ.”

“உண்மையாடா? நான் கேட்கிறது நிஜமா?”

டீச்சருக்கு நம்ப முடியவில்லை.

“ஆமாம் டீச்சர், நான் இப்போது ஒரு போலீஸ் அதிகாரி. ஒரு மிட்டாய் வாங்கித் தின்ன வேண்டும் என்ற ஆசையில் அப்போது எடுத்த அந்த ஐந்து ரூபாய், என்னை மற்றவர்களின் முன் ‘திருடன்’ ஆக்கியது. அன்றே என்னை ஏளனம் செய்தவர்களின் முன் ஒரு போலீஸ்காரனாக நிற்க வேண்டும் என்பதே என் மனத்தில் இருந்த கனவாக இருந்தது…”

-நண்பன்


மரணம்_ஒரு_ஆனந்தம்


மரணம்_ஒரு_ஆனந்தம்

நாம் இறந்த அடுத்த நொடியே நம்முடைய உயிர் ஆத்மாவாக மாறி வெளியே நின்ற படி நம்மை வேடிக்கை பார்க்க ஆரம்பித்து விடும்.

கொஞ்ச நேரத்தில் எப்படியோ இறந்த செய்தி நம் வீட்டுக்கு போய் விடும்,

எல்லோரும் கதறியழுதுகாத்திருப்பார்கள்

நம்மை வேடிக்கை பார்க்க ஊரே திரண்டு நிற்கும், உறவினர்கள், நண்பர்கள் என எல்லாருக்கும் உடனே தகவல் சென்று விடும்,

இவ்வளவு நாள் நேராக வீட்டுக்குள் சென்ற நம்மை இன்று வாசலிலேயே வைத்து விடுவார்கள்,

இத்தனைக்கும் அந்த வீட்டை நாம் தான் பார்த்து பார்த்து கட்டியிருப்போம்,

எல்லாம் நேரம்!

ஆளுக்கொரு பக்கம் மார்பிலும் தலையிலும் அடித்துக்கொண்டு அழுவார்கள், வருகின்ற நண்பர்களையும் உறவினர்களையும்கூட கட்டிக்கொண்டு அழுவார்கள், நமக்கு ஒன்றுமே புரியாது,

அவர்கள் அழுவதை பார்த்து கஷ்டமாக இருந்தாலும் உள்ளுக்குள் சந்தோஷமாக இருக்கும் நம்மீது இவ்வளவு பாசம் வைத்திருக்கிறார்களே என்று!

உங்களை விட்டு எங்கும் போகமாட்டேன் எப்போதும் உங்களுடன் இருப்பேன் என்று ஆறுதல் சொல்லி கண்ணீரை துடைக்கவேண்டும் என்று துடியாய் துடிப்போம்.

ஆனால் எதுவுமே முடியாது. அதுதான் மரணத்தின் மிகமோசமான துயரம்!

ஆனால் நம்மால் தான் உணரமுடியாது, ஒரு வழியாக உள்ளே தள்ளி அடைத்து விட்டார்கள், இருட்டிக்கொண்டதால் வெளியே campfire ம் போட்டுவிட்டார்கள்.

அழுது கொண்டே ஓடி வருகிறார்கள், இவ்வளவு நேரத்திற்கு பிறகு தமிழில் நமக்கு பிடிக்காத அந்த வார்த்தையை ஒருவன் சொன்னான், 'பொணத்தை ' கொஞ்சம் தள்ளி வைங்க பந்தல் போடணும்,

நம்ம அப்பா எவ்வளவு அழகா பெயர் வச்சிருந்தாலும் செத்த பின்னாடி பத்து காசுக்கு தேறாது!

நேரம் செல்ல, செல்ல கூட்டம் அதிகமாகி கொண்டே இருக்கிறது. பகையாளிகள் கூட நம்மை ரொம்ப நல்லவன் என்று certificate தருகிறார்கள்,

ஒருபக்கம் தாரை தப்பட்டை இன்னொரு பக்கம் மக்கள் வெள்ளத்தில் மாலை மரியாதைகள் இன்னொரு பக்கம் பட்டாசு சத்தம், எல்லாம் இருந்தும் என்ன பிரயோஜனம்!?

அத்தனை பேரு முன்னாடி அரைகுறை dress சோட நம்மை குளிக்க வச்சி நம்ம மானத்தை வாங்கிட்டாங்களே!!

என்ன பண்றது பொணமா பொறந்தாலே இப்படிதான்! ஒருவழியாக எரிப்பதற்கோ புதைப்பதற்கோ எடுத்துசெல்கிறார்கள்

இவ்வளவு நாள் நாம் போட்ட ஆட்டத்தை எல்லாம் சேர்த்து நாலு பேர் ஆடிகொண்டு இருக்கிறார்கள்! கடைசியில் நம்மை எரித்தேவிட்டார்கள்!

இனி எங்காவது நாய் ஊளையிட்டால் கூட நாம் தான் வந்திருக்கிறோம் என்று புலுக ஆரம்பித்துவிடுவார்கள்!

அடுத்த நாள் வீட்டுக்கு சென்று பார்த்தால் அழுகை குறைந்து விசும்பலாகி இருக்கும். அதற்கு அடுத்த நாள் அந்த விசும்பலும் குறைந்திருக்கும்.

இப்படி நாளாக நாளாக நம்மை கொஞ்சம் கொஞ்சமாய் மறந்து இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி விடுவார்கள்!

ஒவ்வொரு இறப்பின் போதும் எத்தனை எத்தனையோ கனவுகளும் ஆசைகளும்

சேர்ந்தே புதைந்து போகின்றன!

இப்படி ஒவ்வொரு நாளும் சராசரியா உலகம் முழுவதும் 70,000 பேர் உயிர் துறக்கிறார்கள்!

நாளைய விடியல் நமக்கானது என்கின்ற எந்த உத்திரவாதமும் இல்லாதபோது நாம் ஏன் பொய்யோடும், பகையோடும், பொறாமையோடும், பாவத்தோடும் நம் வாழ்க்கையை வாழ வேண்டும்? பூமியில் வாழும் காலத்தில் சந்தோஷமாக

வாழுங்கள்...

என்று அன்புடன் எஸ் கே #கோவிந்தராஜ்


சனி, 20 டிசம்பர், 2025

என் கனவுகளை டிகோடிங் செய்தல்..

என் கனவுகளை டிகோடிங் செய்தல்..

நமது கனவுகள் ஆழ்மனதில் இருப்பதாகவும், சில சமயங்களில் சுதந்திரமாக செயல்படுவதாகவும் கூறப்படுகிறது, நம்பப்படுகிறது. ஆனால் கூட்டு உணர்வு ( collective consciousness)மற்றும் அதீத உணர்வு ( super consciousness) போன்ற பிற நிலைகளில், அது பெரும்பாலும் சமூக ,பொருளாதார மற்றும் கலாச்சார வளர்ப்பைப் பொறுத்தும் சம்பந்தப்பட்ட தனிநபர்களின் நடத்தையைப் பொறுத்தும் அமைகிறதாக சொல்லப்படுகிறது.

மற்ற அம்சங்களுக்குள் ஆழமாகச் செல்லாமல், எனது ஆழ்மனதில் மீன்பிடிக்கச் செல்ல நான் எனது நேரத்தை எடுத்துக்கொள்கிறேன்.

நேற்று பல கனவுகள் பல வருடங்களாக வந்து போயின. அதனால் பெரும்பாலும் என் கனவுகளில் வார்த்தைகளைக் கொண்டுவரத் தவறிவிடுகிறேன். ஆனால் என் நம்பிக்கைக்கு மாறாக, புதன்கிழமை டிசம்பர் 2025 அன்று வார்த்தைகளை அவற்றில் செலுத்துவதன் மூலம் தவிர்க்க முடியாததை முயற்சித்தேன். இதில் வாசகர்கள் சில தடயங்களைக் கண்டுபிடித்து, அவர்களின் கருத்துக்கள், வெளிப்பாடுகள் மற்றும் அனுபவங்களை பின்னூட்டமாக பரிந்துரைக்க முடியும். இதன் மூலம் அர்த்தமுள்ள வாழ்க்கை மற்றும் இருப்புக்கு அவசியமான அர்த்தமுள்ள உரையாடலுக்கு என்னுடை கதையாடலை கொண்டு வர முடியும் என்று நினைக்கிறேன்.

முதலில், கனவுகளைப் பற்றி நான் விரிவாகப் பேச விரும்பவில்லை. நான் அப்படிச் செய்ய முயற்சித்தால், வாசகர்கள் அவற்றை எந்தவிதமான ஆதாரமும் இல்லாமல் கற்பனையாகக் காண்பார்கள்.

எனவே நான் நேரடியாகச் சென்று எனது உண்மையான உணர்வுக்கு ஏற்ப விளையாடுகிறேன்.

இது எனது கதை. கும்பகோணத்தில் உள்ள நாணயக்காரன் தெருவில் (சோழர்களின் காலம் -ஒரு காலத்தில் நாணயங்களை உற்பத்தி செய்தவர்கள் என்று பொருள்) அமைந்துள்ளது "சிவகுருநாதன் செந்தமிழ் நூல்

நிலையம் " .அங்கு சென்று அந்த நூலகத்தில் படித்து வருவதை வாடிக்கையாக கொண்டு இருந்தேன்.

சிவகுருநாதன் செந்தமிழ் நூல் நிலையம் : -ஓய்வு நேரத்தை ஆய்வு நேரமாக்கும் ஒரு அற்புத கோயில்....

சிவகுருநாதன் செந்தமிழ் நூல் நிலையம்
ஓய்வு நேரத்தை ஆய்வு நேரமாக்கும் எழுத்துகள்
சிவகுருநாதன் செந்தமிழ் நூல் நிலையம்
ஓய்வு நேரத்தை ஆய்வு நேரமாக்கும் எழுத்துகள்
சிவகுருநாதன் செந்தமிழ் நூல் நிலையம்
ஓய்வு நேரத்தை ஆய்வு நேரமாக்கும் எழுத்துகள்

நூலக இணை குறியீடு மேலே....

இதன் ஊடாக , கும்பகோணம் என்று அழைக்கப்படும் எங்கள் கோயில் நகரத்தின் தெருக்களைப் பற்றிய சொற்களின் "சொற்பிறப்பியல் " பற்றிய இணைப்புகளையும் நான் வழங்குகிறேன்.

இதோ கீழே காண்க ....

‘குடியை’ அறிவோம்...
‘குடியை’ அறிவோம்... சோழநாடு சோறுடைத்து என்பது பழமொழி. எனவே சோறுடைத்த நாடு “சோற நாடு” ஆகிப் பின், சோழ நாடாகியது என்பர். இங்கே செவி வழி கேட்ட,...
‘குடியை’ அறிவோம்...
‘குடியை’ அறிவோம்... சோழநாடு சோறுடைத்து என்பது பழமொழி. எனவே சோறுடைத்த நாடு “சோற நாடு” ஆகிப் பின், சோழ நாடாகியது என்பர். இங்கே செவி வழி கேட்ட,...
‘குடியை’ அறிவோம்...
‘குடியை’ அறிவோம்... சோழநாடு சோறுடைத்து என்பது பழமொழி. எனவே சோறுடைத்த நாடு “சோற நாடு” ஆகிப் பின், சோழ நாடாகியது என்பர். இங்கே செவி வழி கேட்ட,...

ஒரு வாசகனாக, ஜெயகாந்தன், சுஜாதா, லட்சுமி, பாலகுமாரன் போன்றவர்களின் நாவல்களைப் படிப்பது எனக்கு சுவாரஸ்யமாக இருக்கிறது...

டெகார்ட்ஸ், கார்ல் ஜங் போன்றவர்களின் தத்துவத்தைப் படிப்பதிலும் என் எண்ணம் எப்போதும் வலுவாக வேரூன்றி இருப்பதைக் காண்கிறேன்.

ஆனால் நேற்று என் கனவுகளில் நான் கடந்து வந்தவை, அதாவது டிசம்பர் 16, 2025 அன்று சுவாரஸ்யமாக இருந்தன...

தமிழ்நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்து கொண்டிருந்தது,

கும்பகோணமும் விதிவிலக்கல்ல.

அதனால் நேற்று என் தூக்கத்திற்குள் செல்வது எனக்கு கடினமாக இருந்தது.

சமீபத்தில் எங்கள் நூல் நிலையத்தில் நான் நாதஸ்வர வித்வான்கள் மற்றும் அவர்களின் சோதனைகள் மற்றும் இன்னல்கள் பற்றிய " சஞ்சாரம் " நாவலைப் படித்தேன்.அதை எனக்குப் பிடித்த எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் வரலாற்றுத் தொடுதலுடன் விரிவாக விளக்கி இருந்தார்.

சஞ்சாரத்தை முடித்த பிறகு, ஆங்கிலேயர்கள் வருவதற்கு முன்பு இந்தியாவை ஆண்ட முகலாயர்களைப் பற்றிய "இடக்கை " (இடது கை) என்ற மற்றொரு நாவலை எடுத்தேன்.

நான் ஔரங்கசீப்பைப் பற்றிய முதல் அத்தியாயத்தைப் படித்து முடிக்க ஆரம்பித்தேன்.

நான் படிக்கும் போது என் நேரத்தில் கரைவதாக காண்கிறேன். முதல் அத்தியாயத்தை சுமார் 15 நிமிடங்களில் அதை முடித்த பிறகு, இடைவிடாத மழை காரணமாக என் வீட்டிற்குத் திரும்பினேன், பின்னர் நூலகத்திலும் விளக்குகள் அணைந்தன.

நான் அவ்வப்போது தூங்கிவிட்டேன், அதிகாலை 4:00 மணியளவில் என் தூக்கம் கலைந்தது. என் உடலில் நான் கண்ட காட்சிகள் என் கொந்தளிப்பை ; என் உளவியல் அமைப்பைத் தூண்டியது.

இது என் உடலை சிலிர்க்க வைத்தது.என் உடல் உளவியல் மற்றும் அனுபவங்களால் சிலிர்த்து போயின.

நான் ஏன் என் உளவியல் அமைப்பைப் பற்றிப் சொல்கிறேன் என்றால், என் கனவுகள் ,என் மக்களையும், என் இல்லத்திற்கு அருகிலுள்ள இடங்களையும் மையமாகக் கொண்டிருந்தன. அதாவது என் வீட்டிலிருந்து சுமார் 50 பர்லாங் தொலைவில் பாயும் காவிரி நதியான அரசலாறு நதி.

அரசலாறுக்கு அருகில் வடக்கு பகுதிகளில் வீடுகள் இல்லை.புதர்கள் மற்றும் களைகள் மட்டுமே உள்ளன என்பதை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அங்கே ,அந்த இடத்தில் என் கனவுகளில் மதங்கள், இனங்கள், மொழிகள், பணக்காரர்கள் மற்றும் ஏழைகள் என அனைத்து வயதினரையும், பல வகையான மக்கள் தங்களின் தனித்துவமான மற்றும் தனித்தனி வாழ்க்கையை நடத்துவதைக் கண்டேன். அந்த பரந்த இடம் ஒரு வெட்ட வெளி அன்று ; மாறாக பரந்த அளவில் திறந்திருக்கும் ஒரு மாயவனின் மாளிகை. என்னைத் தவிர வேறு யாரும் அவர்களைக் கவனிக்க அல்லது அக்கறை காட்ட முயலவில்லை.

நான் ஒரு குழப்பத்தில் சிக்கிக் கொண்டேன்.நான் உண்மையிலேயே குழம்பி போய் இருந்தேன். எப்படி வெளியே வந்து என் வீட்டை அடைவேன் என்று பயந்து பயந்து வாழ்வதாக உணர்ந்தேன்.

இதுவரையிலான என் கனவை படித்தவர்கள் கொஞ்சம் நிற்க....

ஒரு பின்னோட்ட கதை ...

நான் கண்டியூர் செல்லும் வழியில் அய்யம்பேட்டைக்கு அருகிலுள்ள ஒரு தூங்கும் கிராமமான 'மாத்தூர்' என்ற இடத்திற்குச் சென்றேன். நான் குறிப்பிட்ட இடம் கும்பகோணத்திலிருந்து சுமார் 30 கி.மீ தொலைவில் உள்ளது.

நான் அங்கு சென்றது எங்கள் குடும்பத்தின் குல தெய்வம் அங்கு இருந்தது. அங்கு "வேண்டியபடி " செய்ய வேண்டிய கடமைகள் இருப்பதால் அங்கு நான் சென்றேன்.எங்கள் மரியாதையை கடவுளுக்கு காட்டும் அடையாளமாகவும் மேற்கொள்ளப்பட்டது.

எல்லா பிரார்த்தனைகளும் முடிந்த பிறகு , சடங்குகளைச் செய்த பூசாரிகளுக்கு தட்சனை கொடுத்து விட்டு , நான் வீட்டிற்குத் திரும்பினேன்.

அந்த பேருந்து என்னை இறக்கிவிட்ட ஒரு இடம் என்னைத் தப்பிக்க வழியின்றி பயப்பட செய்தது. பயத்தால் நான் சித்தம் கலைந்தேன்.ஒரு கற்பனைக் கனவில் வாழ ஆரம்பித்து விட்டேன்.

நான் என் வீட்டிற்கு அருகில் பேருந்தில் இருந்து இறங்கிய இடம் -தஞ்சையின் சந்துக்களைப் போன்று ஒரு எலிப் பொறி வழி போல - காட்சி தந்தது.

அது எனக்கு ஓரளவு அந்நியமாகத் தோன்றியது.

ஒன்றுக்கு மேற்பட்ட முறை என் வீட்டை இணைக்கும் வழிகளைக் கண்டுபிடிக்க முயற்சித்தேன். அந்தப் பாலம் பழையதாகவும், பழக்கமானதாகவும் இருந்தது. அது என்னையும் என் வீட்டையும் பிரித்தது.

கூடுதலாக, எனக்கு மிகவும் பரிச்சயமான ஒரு நண்பர் வந்து என்னுடன் பேசுவதைக் கண்டேன். அவர் என்னை அவரது வீட்டிற்கு அழைத்தார், என்னை நன்றாகப் உபசரித்து உணவு வழங்கினார்.

என்னுடைய பயத்தைப் பற்றி நான் அவரிடம் சொன்னேன், அவருடைய சகோதரனும் மிகவும் கவலைப்பட்டார். அவர் என்னை ஆறுதல்படுத்தினார், என் வீட்டை அடைய உதவுவதாக உறுதியளித்தார்.

குறுக்கீடுகளுக்கு மன்னிக்கவும்:

நான் எல்லாவற்றையும் விவரிக்கும்போது, ​​ தாராசுரம் மேப்பாலம் என்பது அரசலாற்று குறுக்கே அமைந்த ஒன்று.ஆற்றின் அருகே வடப் புறமாக எந்த வீடுகளும் இருக்காது. மாறாக புதர்கள் மண்டி இருக்கும்.

ஆனால் எனது பிரமையில் காட்சிகள் வேறுவிதமாக இருந்தன.

பாலத்தின் மறுபுறம் மக்கள் பெருமளவில் செல்வதை நான் காண்கிறேன், அவர்களுடன் சேர்ந்து பாலத்தின் மறுபுறம் அடைய முயற்சித்தேன்.

பின்னர் சாலை கூத்தாநல்லூர் செல்லும் வழி என்று எனக்குச் சொல்லப்பட்டது.

ஐயோ, கும்பகோணத்திலிருந்து சுமார் 40 கி.மீ தொலைவில் இருந்த கூத்தாநல்லூர் என் கனவில் எப்படி வந்தது ?

நான் கனவுகளில் தொலைந்து ,என் எண்ணங்களில் ,பிரமையில் இருப்பதால், என் கனவுகளை நியாயப்படுத்த எனக்கு எந்த காரணமும் இல்லை. உண்மையில் நான் தனிமையிலும் , வறட்சியிலும் இருக்கிறேன்.

வேறொரு பாதையில் செல்ல முயன்றபோது, ​​சிங்கக் குட்டிகள் தங்கள் தாயுடன் தூங்கிக் கொண்டிருந்ததைக் கண்டேன்.

நான் உறைந்து போனேன்.

நான் பயந்து திரும்பி வந்தேன்.

என் இரவுகளை புரட்டிப் போட்டுவிட்டு வந்த கொந்தளிப்பான நேரம் அது, நான் வீட்டிற்குச் செல்வேன் என்ற நம்பிக்கையை இழந்தேன்.

பல ஆண்டுகள் சந்திக்காத ஒரு நபரை நான் சந்தித்ததும் , அதுவும் அரசலாற்று மறு கரையில் மக்கள் வசிக்காத வடக்குப் பகுதியில் வீடுகள் எப்படி வந்தன.

நிஜ வாழ்க்கையில் என்னால் கற்பனை செய்து பார்க்க முடியாதது கற்பனையில் சாத்தியமாகிறது.

கனவுகளில் மட்டுமே எல்லா கற்பனைகளும் இருப்பதைக் கண்டேன்.

மனிதர்களிடம் நான் கண்ட உருவங்கள், அவர்களின் செயல்கள், அனைவரும் பார்க்கும் வகையில் "திறந்திருந்த வாமும் வீடுகள் ".

கடவுளே ; என்ன ஒரு பேய் ஆட்டம் நடத்துகிறாய்.

இதே , அவற்றில் சில....

1. காமவெறி செயல்களில் ஈடுபடும் வயதானவர்கள்

2. இளைஞர்கள் எதையும் பற்றி கவலைப்படாமல் வேலையைச் செய்வதில் ஈடுபட்டனர்.

3. சிலர் நெசவு செய்வதில் ஈடுபட்டுள்ளனர்..

4. சிலர் சாப்பிடுகிறார்கள்..

5.யாரும் மற்றவர்களைப் பற்றி பொறாமைப்படவில்லை...

6. உண்மையில் எந்த சண்டையும் இல்லை, மோதல்களும் இல்லை, வதந்திகளைப் பரப்புபவர்களும் இல்லை.

7. யாரும் மற்றொரு நபரைப் பற்றிப் பேசவில்லை, பேச வேண்டிய அவசியமில்லை

8. அங்கே எல்லாம் செயல், செயல், செயல், அதுவும் இப்போது, ​​இப்போது, ​​இப்போது..

9. ஐயோ, என்ன ஒரு உன்னத உலகில், நான் வாழ்கிறேன்.

இறுதியாக நான் எனது சரியான நேரத்தையும் வழியையும் கண்டுபிடித்தேன், அது என் வீட்டை இணைத்தது.

என் நண்பர் அந்த இடத்திற்கு என்னுடன் வந்தார், கடைசியில் அவர் என்னிடமிருந்து ஒரு விடைபெறுதலைக் கூட எதிர்பார்க்காமல் மறைந்துவிட்டார்.

என் கனவுகளின் கூட்டுத்தொகை மற்றும் உள்ளடக்கம் பின்வரும் காரணிகளால் இருக்கலாம்.....

1. சஞ்சாரத்தில் நாவலில் நாதஸ்வர வித்வான்களின் கதையை எஸ்.ராமகிருஷ்ணன் சொல்லி விதம் என்னைப் பெரிதும் பாதித்து இருக்கலாம்.நான் கதைகளில் மூழ்கிவிட்டேன், அதனால் எனக்கு மாயத்தோற்றம் ஏற்பட்டது. ஆனால் என் கனவுகளில் என்ன தவறு நடந்தது என்று எனக்குத் தெரியவில்லை...

2. மற்றொரு நாவலான இடக்கை (இடது கை) என் தத்துவ சிந்தனைகளைப் பாதித்தது.

எஸ். ரா . அவர்கள் ஔரங்கசீப்பை பற்றியும் அவரது வாழ்க்கையின் இறுதிக் காலத்தைப் பற்றியும் எழுதி இருந்தார். அதில் ஔரங்கசீப்பின் ஏக்கம் , தனிமை வெளிப் பட்டது. அந்த நாவல் அவரது வாழ்க்கையை மெதுவாக கடைசி கால நினைவுகளைப் பற்றி சொல்லிக் கொண்டிருந்தது.

அவர் தனது இறுதி நாட்களில் சூஃபியிடம் சென்றார் . அவர் வாழ்க்கையின் நிலையற்ற தன்மையைப் பற்றி போதித்து அதைப் பெறுவதற்கான ஞானத்தையும் கற்றுக் கொடுத்துக் கொண்டு இருந்தார்.

அந்த ஞானி -காலம் நமக்கு அற்புதங்கள் நிறைந்த வாழ்க்கையை கொடுத்த வண்ணம் இருக்கிறது. அதை

கணக்கிடவோ , அளவிடவோ நம்மால் முடியாது என்றார்.

வாழ்க்கையில் நல்ல காரியங்களைச் செய்தால் அது திரும்ப ஒரு காலத்தில் நமக்கு வந்து உதவும் என்றார்.

மேலும் அதிகாரம், பணம், காமம் போன்றவற்றிற்காக ஈகோவுடன் வாழ்க்கை எதிர்பார்த்து வாழும் போது அது ஒருவரின் உயிருக்கும் நன் தலைமுறைக்கும் எப்போதும் ஆபத்தை விளைவிக்கும்.

உடல்களை விட மனங்களே அதிக பாதிப்புக்கு ஆளாகின்றன.

காலத்தில் பங்கேற்பாளர்களாகிய நாம் நம் பங்கை சிறப்பாக செய்ய வேண்டும்.

நேர்மறை சிந்தனை குலத்திற்கும் , வாழ்விற்கும் செழுமை ஊட்டும்.

எதிர்மறை மனநிலையுடன் செய்யும் போது நாம் பல பாதிப்புகளுக்கு ஆட்பட்டு பரிதவிப்போம்.

எனவே, வண்ணங்களும் ,கனவுகளும் நிறைந்த வாழ்க்கையை வெறும் ஆசைகள் மற்றும் சுயநலத்திற்காக பயன் படுத்தாமல் எதிர்பார்ப்புகளை முடிந்தவரை புறம் தள்ளி உண்மையுடன் வாழ என் கனவுகளை இறுதியாக மூடுகிறேன்.

இந்த உலகம்

தாவரங்கள்,

விலங்குகள் ,

மற்றும் ,

வாழ்க்கையின் ,

அத்தியாவசியமான,

காற்று,

நீர்,

விண்வெளி,

நெருப்பு

மற்றும் ,

பூமி ......

ஆகிய அனைத்து உயிரினங்களையும் உள்ளடக்கிய ஒன்று.

முழு சுற்றுச்சூழல் அமைப்பையும் உள்ளடக்கிய செயல்பாடுகளால் அது நிரப்பப்பட வேண்டும்.

அனைத்து மக்களின் நல்வாழ்வில் அக்கறை கொண்ட அனைவரும் இந்த பூலோக வரலாற்றை பாதுகாக்கப் பாடுபட வேண்டும்.

அன்புடன்.

ராமன். செல்வராஜ்.

செவ்வாய், 16 டிசம்பர், 2025

‘குடியை’ அறிவோம்...

‘குடியை’ அறிவோம்...

சோழநாடு சோறுடைத்து என்பது பழமொழி. எனவே சோறுடைத்த நாடு “சோற நாடு” ஆகிப் பின், சோழ நாடாகியது என்பர்.

இங்கே செவி வழி கேட்ட, உணர்ந்த செய்திகளை பதிவிடுகிறேன்.

குடந்தையைச் சுற்றி உள்ள சிற்றூர்களின் பெயர்கள் அதற்கான காரணங்களை ஆராயும்போது ஒரு ஒற்றுமையை காண முடிகிறது.

அவ்வாறே சோழ நகரத்திற்கு ‘பழையாறை’ தலை நகரமாக விளங்கி இருக்கிறது. அதற்கு ஆதாரமாக அரண்மனைக்காரத்தெரு, ஆரியப்படையூர், காவல்காரன் தெரு, பம்பப்படையூர் போன்ற பெயர் உடைய தெருக்களும், கிராமங்களும் கோயில் நகரை அலங்கரிக்கின்றன.

மேலும் சில விவரங்கள்:-

‘மாதுளம் பேட்டை’ என்பது “மகாதளம் பேட்டை” என்ற சொல்லின் மருவுதல் எனக் கொள்ளலாம்.

மகா தளம் பேட்டை அருகில் ஆனைக்காரன்பாளையம் உள்ளது.

இதுவே யானை படைக்கான தளமாகவும் இருந்து இருக்கக் கூடும்.

எனவே நம் முன்னோர்கள் பல படைகளை அமைப்பதற்கு மகா தளம் அமைத்து அதை “பேட்டை” என்று அழைத்தனர்.

மேலும் குடந்தையையின் வரலாற்று, தொழில் மற்றும் வணிகச் சான்றுடைய அடையாளங்கள்:

1. பழைய அரண்மனைத்தெரு,

2. கம்பட்ட (நாணயம், நிதி தொடர்புடைய) விஸ்வநாதர் தெரு,

3. பஞ்சுக்காரத்தெரு,

4. நெல்லுக்கடைத்தெரு,

5. வேம்படித் தெரு (பித்தளை வியாபாரம்)

6. காசுக்காரத்தெரு,

7. அந்தணர்கள் குடியிருப்பு பகுதிகள்

A. சோலையப்பன் தெரு,

B. பக்த புரித்தெரு,

C. வேத பாடசாலை போன்றவை.

அரசலாற்றங்கரையில் நெசவாளர்கள் குடியிருப்பு நடந்து இருக்கிறது. அங்கே ‘சவுராஸ்டிரா மக்கள்’ அதிகம் வாழும் பகுதி. அவர்கள் ஒன்று சேர்ந்து ஆரம்பித்தது தான் - “ராஜ ராஜேந்திரப் பேட்டை கூட்டுறவு சங்க பண்டகசாலை.”

இப்படியாக செம்படியான் தெரு என்று சொல்லிக்கொண்டே போகலாம்.

ஆக சோழ மன்னர்கள் “குடிகளாக மக்களை” பிரித்து அவர்கள் செய்யும் தொழிலை வைத்து குடி அமர்த்தினர் என்று சொல்லலாம்.

ஆரிய படையூர் என்ற சிற்றூரில் “சோழன் மகாதேவின் சிலை” இருப்பதாக கூறுகின்றனர்.

உடையாளுர் - பட்டீஸ்வரம் போகும் வழியில் சில சிவன் கோயில்களை பார்க்கலாம் - பாழடைந்த நிலையில்!!

அவைகள் யாவும் ஊர் “பிரபுக்கள் மற்றும் நிழக்கிழார்” வாழ்ந்து மறைந்த நினைவுச்சின்னங்கள்.

இது மந்திரிகள் போன்றோரையும் உள் அடக்கும். அவர்கள் ராஜராஜ சோழனிடம் (ராஜாவிடம்) பணியாற்றியதற்கு மரியாதை நிமித்தமாக உருவாக்கப்பட்டவை என்று கூறப்படுகிறது.

மேலும் பல உதாரணங்கள்:

இன்றும் ‘திருவாடுதுறை ஆதீனத்தில் உள்ள தென்னத்தோப்பில் குட்டிக் கோயில்களை பார்க்கலாம்’ - இவைகள் யாவும் ஆதீன கார்தாக்கள் மறைவுக்கு பிறகு ஏற்படுத்தப்பட்ட நினைவுச் சின்னங்கள்.

நன்றி: பொருளாளர்,
“சிவகுருநாதன் செந்தமிழ் நூல்நிலையம்.”