ஞாயிறு, 17 செப்டம்பர், 2023

வாழ்க்கை என்பது எவ்வளவு தூரம்?

எவ்வளவு தூரம்;

எவ்வளவு தூரம்;

எவ்வளவு தூரம்,

அளக்க முடியவில்லை;
எல்லை இல்லா வாழ்வு;
எதற்கு இப்படி அலைகிறது;


மனமே பேதம் கொள்ளாதே;
உன் குணம் எனக்கு தெரியும்.


உறவை , நட்பை , பழக்க,
வழக்கத்தை , மாண்பை, மதிப்பை,
மதி இழக்க செய்ய வல்ல,
ஆற்றல் உனக்கு இருக்கிறது.


என்ன செய்ய ?
பாவி மனிதர்கள் நாங்கள் !

படைக்கப்பட்டோம்,
வளர்க்கப்பட்டோம்,
வாழ்வதற்காக வழிகாட்டப்பட்டோம்.

பார்வை எல்லாம் பறக்கின்றன.
நான் மற்றும் ஒன்றை ஆளாய் நிற்கிறேன்.


என்ன செய்ய......
இனி என்ன செய்ய முடியும்...
என்ன செய்ய வேண்டும்...
சொல்- உன்னிடமே கேட்கிறேன்.


பிறப்பு என்பது ஜனனம்.
தெரியாமல் நடக்கிறது.
இறப்பு என்பது மரணம்.
தெரிந்தே நடக்கிறது.

நடப்பதை நிறுத்த முடியாது.
முயற்சிக்கிறோம்; முடிந்த வரை போராடுகிறோம்.

பிரிவும் இயற்கையே !!
வாழ்வும் இயற்கையே!!
இறப்பும் இயற்கையே!!
இதில் ஏங்க என்ன இருக்கிறது ??


சொல்ல எளிதாக இருக்கிறது - நினைத்தால் சுடுகிறது.

எவ்வளவு நாள் இந்த எண்ணங்களை சுமப்பது ?

சுமப்பது சுவை ;
அப்படியானால் எதை சுமப்பது,
எதிர் காலத்தையா ?
நிகழ் காலத்தையா ?
இறந்த காலத்தையா?


சொல் மனமே சொல் .
என் மனசு எனக்கு தெரியவில்லை.
என் இதயம் துடிப்பது எனக்கு உணர்த்துகிறது.


என் துல்லல் தொடர்ந்து இந்த பிரபஞ்சத்தில் இருந்து கொண்டு என்னை ஆட்டி விக்க வேண்டும்.

ஆட்கொள்ள வேண்டும்.

என் " இதயம்" என் "மனதை" ஆட் கொள்ள வேண்டும்.

இறைவா,
இயற்கையே,
எல்லாம் வல்ல பரம்பொருளே,
வழி செய்,
வழி செய்,
வழி செய்....


வழி செய்வாயாக ..........

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக