selvaraj shanthi
வெள்ளி, 2 பிப்ரவரி, 2024
ஐந்திணை இருநூற்றைம்பது நூல் வெளியீடு - இடம் YMCA. நந்தனம்.
ஞாயிறு, 17 செப்டம்பர், 2023
வாழ்க்கை என்பது எவ்வளவு தூரம்?
செவ்வாய், 5 செப்டம்பர், 2023
இப்படித் தான் இருக்க வேண்டும்
வியாழன், 3 ஆகஸ்ட், 2023
கவிஞர்களே !! உங்கள் கவனத்திற்கு !!!
வியாழன், 30 மார்ச், 2023
யாருக்காக?
"படிக்கும்போதே ஒரு குறிக்கோளுடன்படிக்க வேண்டும்.
நம்முடைய இலக்கு என்ன?
எதற்காக படிக்கிறோம்?
இந்த சமுதாயத்தில் நம் பங்கு என்ன?-
என்பதைப் பற்றிய 'புரிதல் ' நம்முடைய குழந்தைகளுக்கு அறவே இல்லை என்றே சொல்ல வேண்டும்."
மகன் +2 வகுப்பிலும் , மகள் 10th வகுப்பிலும் படித்துக்கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு இன்னும் 60 வருட வாழ்க்கையை (அமைத்துக் கொடுப்பது) பற்றி அலுத்துக் கொண்டே 'என்ன நான் சொல்வது சரிதானே ? என்ற படி காலை பத்திரிகை செய்திகளை படித்துக் கொண்டே வந்த காப்பியை சிறிது தொண்டையில் மூழ்கிய படியே வினவினார் !
எல்லாம் சரி, ஆனா ஒன்றும் எனக்கு சரியாக படலே ;
என்னடி ;? ஆமா போங்க, நாளு நாளா நம்ப சமைய பாத்திரம் சுத்தம் செய்றவங்க வரவே இல்லை ;
நானும் போன் பண்ணி பார்த்தேன். எடுக்க மாட்டேங்கிறாங்க,
நம்ப பையனை ஸ்கூல் போகும் போது பார்த்து விட்டு போகச் சொன்னேன்.
எங்க கேட்கிறாங்க? - உங்க மகளைப் பற்றி பேசவே வேண்டாம் .அப்படி வளர்கிறேள்.
"என்ன பரத நாட்டியம், கலை , ஒவியம் என்று கற்று பயன்"
பெற்ற தாய்க்கு ஒரு கஷ்டம் என்று வந்தால் பதற வேண்டாமோ?
'நீ சொல்றது நன்னா எனக்கு புரியுது; என்னை என்னச் செய்ய சொல்ற '
ஒண்ணும் செய்ய வேண்டாம். என் குறைய மட்டும் சொன்னேன்.அவ்வளவுதான்.
முடிந்தால் வேறு ஏற்பாடு செய்யவும்; இல்லையேல் எல்லோரும் சேர்ந்து "Swiggy" ஆர்டர் பண்ணி சாப்பிடுங்க.
-"எனக்கு மட்டும் தான் என்னால் சமைக்க முடியும்" - அந்த நொடியில் அவள் வாழ்ந்தாள்.
அடிப்பாவி ; இப்படி சுயநலக்காரியாகி விட்டியே !!! இது அடுக்குமா ????
எழுந்து தன் அண்ணாரைப் பார்த்தாள். பார்த்த பார்வை அப்படியே இருந்தது.
அவர் மீது சாய்ந்தாள்.
திங்கள், 27 மார்ச், 2023
நாம் எல்லோரும் நடிக்கப் பிறந்தவர்கள்.
தேவகி, ஒரு சமுக செயல்பாட்டாளர்; எழுத்தாளர்; ஒவியர் என்று பல முகத்தன்மை கொண்டவர்.
அவருக்கு இப்போது வயது 80 ஆகிறது. இன்றும் அவரை சந்தித்து நேர்காணல் காண "காட்சி ஊடகங்கள் காத்து இருக்கின்றன.
அவருடைய பேச்சு இப்போது அதிகம் பகிரப் பட்டு வருகிறது.
ஒரு நிருபர் அவரிடம் பேட்டி காணும் போது :
"மேடம், நீங்கள் சமூக அக்கறை கொண்டவர்; பெண்கள் விஷயத்தில் குரள் கொடுக்கத் தவறியது இல்லை. அது அவர்களுடைய 'உடையைப்
பற்றியோ, மதரீதியான தடைகள் பற்றியோ - 'அடிப்படை நீதி'-எல்லா மனித குலத்திற்கும் பொருந்தும் என்றும் பேசிவந்து உள்ளீர்கள்".
என்னுடைய நேரடியான கேள்வி?
"பூனை நடை" என்கிற பெயரில் நடிகைகளும், அவர்களைப் பின் தொடர்ந்து பெண்கள் ( பள்ளி, கல்லூரி உட்பட) தங்களை கேளிப்பொருளாக காட்டிக் கொண்டு , முக நூலிலும், இன்ஸ்டாகிராமிலும் பகிர்ந்து வருவதை எப்படி பார்க்கிறீர்கள் ?
ஒரே வார்தை; அதுவே வாக்கியம். இது ஒரு மாயை. Like பெருவதற்காக செய்யப்படும் ஒரு "விளையாட்டு வலை," . சிறிது காலம் களித்து புளித்து விடும். மனிதனுக்கு மறதியே வரம்.
இது தனி மனித உரிமை; மேலும் இந்த செயல் பிறர் மனதை , மதத்தை, இனத்தை புண்படாத விதத்தில் இருக்கும் பட்சத்தில் இதை ஒரு 'பொழுது போக்காக' எடுத்துக் கொண்டு கடந்து செல்வதே மேல்!
ஆண் தன்னை ஆளுமையாக காட்டுக் கொள்ள பல வழிகளை நாடுகிறான். இதுவும் ஒருவகையில் பெண்கள் தங்கள் "ஆளுமையை " இந்த வழியில் வெளிக் கொணர்கிறார்கள் என்று எடுத்துக் கொள்ள வேண்டயது தான்.
இதில் பெண்மை, கற்பு என்று தொடர்பு படுத்தி பேசுவது அபத்தம். இது ஒரு மனப்போராட்டத்தின் வெளிப்பாடு; இதை ஏற்றுக் கொள்வதும்; நிராகரிப்பதும் அந்த அந்த சமூகத்தின் சிந்தனைக்கு விட்டு விடுகிறேன்.
இதுவே உலவியில் ரீதியான பதிலாகவும் இருக்கும்.
வேறு ஏதாவது 'விடயம்' இருந்தால் , இந்த காணொளியைப் பார்பவர்கள், 'கமெண்ட்' செய்ய கேட்டுக் கொள்கிறேன். சமூகமாக இருந்து சுமூகமாக என்ன செய்ய முடியும் என்பதைப் பார்ப்போம்.
மேலும் கோட்பாடுகளும் , சிந்தனைகளும் நாட்டுக்கு நாடு, இனத்துக்கு இனம் , அரசியலுக்கு அரசியல் வேறுபடும்.
அமெரிக்காவில் "பொருளதாரக் குற்றம்" பெரிய குற்றம். மேலும் ஒருவருடைய விருப்பத்தில் அல்லது சுகந்திரத்தில் தலையிட அரசுக்கும் உரிமை இல்லை.
ஆனால் , நம் நாட்டில் "தலை கீழ் ".
பொருளாதாரக் குற்றம் மன்னிக்கப்படுகிறது . தனிநபரின் அந்தரங்கம் பேசு பொருளாக மாறுகிறது.
வாழ்வியலும் , ஒழுக்கமும் பொருளாதாரத்தில் இருந்து மீட்கப் படவேண்டும்.
தெளிவு வரும் ; தெளிவோம் !!!.
ஆகச் சிறந்த காதல் :
A)ஆகச் சிறந்த காதல் :
அந்த வீடு, இன்னும் எனக்கு ஞாபகம் இருக்கிறது; சுமார் 25ஆண்டுகளுக்கு முன்பு அழைப்பிதழின் பேரில் சென்றபோது அந்த வீடு பழைமை காத்தது. பெரிய திண்ணை. பிறகு முற்றம். நல்ல பரந்த வழிநடப்புகள்.
சிறிய அறை ; பெரிய சமையல் அறை. என்ன சொல்ல !!! அந்த வீட்டைப் பார்ப்பதற்காகவா சென்றான் சாமி ?
இல்லை; இல்லவே இல்லை. அந்த அழகை ,தேவதையை அவள் குடியிருக்கும் வீட்டில் பார்ப்பதற்கு ஏதோ சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொண்டு போக வேண்டிய தருணம் பார்த்து போனான் என்பது தான் உண்மை !
அந்த உரையாடல்கள், விதவை அம்மா, சகோதரன் கல்யாணம் ஆகவில்லை;கரிசனங்கள்; கவனிப்புகள் என்று எல்லாம் பிடித்து இருந்தது சாமிக்கு .
அப்போ , எதற்கு இந்த ஒப்பனை.எல்லாவற்றையும் அடுத்த நாள் சொல்லிவிட வேண்டியதுதான் என்று நினைத்து காத்து இருந்தான்.
அவளே சொன்னாள் : எனக்கு முறைப்படி வரும் ஞாயிறு பெண் கேட்டு வருகிறார்கள். அதற்காக முதல் நாள் சனிக்கிழமை நாங்கள் குடும்பமாக குலதெய்வ வழிபாடு செய்ய வேண்டி இருப்பதால் ' விடுப்பு வேண்டும்' என்று நீட்டினாள் கடிதத்தை.
சாமி, மேலாளர் அமோதித்தார்; அனுமதித்தார்; இதயம் கேட்டது :-
"இனிமேல் அப்படி சொல்லாதே என்று யாரை கேட்பது ?"
B)ஆகச் சிறந்த அரசியல் :
நன்றாகவே தெரியும், இந்த காரியத்தை செய்தால் எதிர்வினை இப்படித்தான் இருக்கும் என்று .
எதற்கும் தன் நெருங்கிய ,ரகசிய நபர்கள் சிலருடன் இதைப் பற்றி யோசித்து , இந்த source ஐ பயன்படுத்தி இந்த lead ஐ பிடித்து ஒரு அரசியல் செய்ய வேண்டும் என்று மேலிடம் சொல்வதாக பகடி அடினான் தலைவன்.
"ஏன், செய்தால் என்ன ? இதில் ஒன்றும் நமக்கு இழுக்கு " இல்லை என்று ஒரு சாரரும்; 'இருந்தாலும் நாமும் அக்கா, தங்கையுடன் பிறந்து இருக்கிறோம் எதற்கு இந்த வம்பு ' என்று மற்றொரு சாரரும் தங்கள் கருத்துக்களை முன் வைத்தனர்.
எல்லாம் "காலத்தால் மறக்கப்படும், அல்லது மறைக்கப்படும்" என்கிற 'நியதி' உண்மை என்பதை உணர்ந்த தலைவன் தன் "இரண்டு" செயலாளரிடமும் இப்படிச் சொன்னான்.
உங்கள் இருவரில் ஒருவர் நம் கட்சியை விட்டு விலகுவதாக அறிவித்து அதற்கு காரணம் "நீதி கேட்டேன் ; நிதி வந்தது " என்று சொல்ல வேண்டும் என்றும் ;அதற்கு மறுநாள் 'தான்' ஒரு press meet ஏற்பாடு செய்து அதற்கு விளக்கம் அளிப்பதாகவும் சொன்னார்.
இருவரும் கைநீட்டினர்- எவ்வளவு தொகை கொடுப்பதாக இருக்கிறீர்கள் !?
அடுத்த நாள் செய்தி :
அந்த உறுப்பினர்கள் இருவரும் கட்சியின் அடிப்படை பதவியில் இருந்து நீக்கப்பட்டனர்.
சிறுதுளிகள் :-
++++++++++
குளங்கள் குட்டைகள் அன்று மருதம்;
வீடுகள் விடுதிகள் இன்று ஆனது;
ஏரிகள் எல்லாம் எளிதாய் மாறிட,
மருதம் இனிமேல் பாலையாய் காண்பாய்!
காலங்கள் ; கோலங்கள்
+++++++++++++++++++
பகலில் வேடம் ; இரவில் ஆட்டம்,
இப்படிச் செய்தால் , எப்படிச் சொல்வது,
உழைத்து உண்ண கரங்கள் இருக்க;
வாயை விற்று வாழ்வது சாதலே !!!
Selvaraj raman